March 23, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

துரோகிகள் இருந்ததால் தான் 2021 அதிமுக ஆட்சிக்கு வர முடியவில்லை – எடப்பாடி பழனிச்சாமி

by Digital Team
October 30, 2025
in News
A A
0
துரோகிகள் இருந்ததால் தான் 2021 அதிமுக ஆட்சிக்கு வர முடியவில்லை – எடப்பாடி பழனிச்சாமி
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

மதுரை திருமங்கலத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில்,
“நெல் கொள்முதல் முறையாக செய்யப்பட்டிருந்தால் விவசாயிகள் சாலையில் நெல்லை குவித்து வைக்க அவசியமில்லை. தொடர் மழையின் காரணமாக சாலையில் குவித்து வைக்கப்பட்ட நெல் முளைத்து விட்டது. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். 15 நாட்களாக நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் சொன்னார்கள்.

நெல் வீணாகியது தொடர்பாக நான் பேசியதில் என்ன அவதூறு இருக்கிறது? விவசாயிகளை சந்தித்தால் பிரச்சனை ஏற்படும் என்பதால் துணை முதலமைச்சர் டெல்டா விவசாயிகளை சந்திக்கவில்லை. பாதிக்கப்படுகின்ற விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை. இந்தியாவிலேயே இப்படி ஒரு முதல்வரை பார்த்ததில்லை.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2022 முதல் 2026 வரை கொள்கை விளக்க குறிப்பில் 1 கோடியே 15 லட்சம் மெட்ரிக் டன் நெல் தான் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விளம்பர மாடல் அரசு இது என்பது நிரூபணமாகி விட்டது. கொள்கை விளக்க குறிப்பில் சொன்னது உண்மையா? முதலமைச்சர் நேற்று சொன்னது உண்மையா? நெல்லை முறையாக கொள்முதல் செய்ய திராணி இல்லாத பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலக்காடுகள் அதிமுக ஆட்சியில் பாதுகாக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் விதிமுறை மீறி வனத்துறை கட்டுப்பட்டு பகுதியில் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. இதில் பல நூறு கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்று உள்ளது.

சார் என்றாலே திமுகவுக்கு அலர்ஜி. Sir என்ன பிரச்சனை திமுகவுக்கு இருக்கிறது என தெரியவில்லை. தகுதியான வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும். Sir பார்த்து ஆளும் திமுக அரசு எதற்காக பயப்படுகிறது?” என தெரிவித்தார்.

டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் சந்திப்பு குறித்த கேள்விக்கு, “நான்கு ஆண்டுகளாக தினகரன் இப்படி சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார். இப்படிப்பட்ட துரோகிகள் காரணமாகவே எங்களால் ஆட்சிக்கு வர முடியவில்லை. செங்கோட்டையனை நீக்குவதில் எனக்கு தயக்கமில்லை. இனிமேல் தான் நடவடிக்கை எடுக்கப்படும்.

சசிகலாவை சந்திப்பது அவரவர் விருப்பம். எத்தனை துரோகி வந்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. மூவரும் ஒன்றிணைந்து எந்த விளைவையும் ஏற்படுத்தாது.
செங்கோட்டையன் குழி பறித்ததால் தான் அந்த தொகுதியில் அதிமுக ஜெயிக்க முடியவில்லை. மூவரும் ஒன்றிணைவதால் அதிமுகவுக்கு எந்த பலவீனமும் இல்லை. பயிர் வளர வேண்டும் என்றால் களை எடுக்க வேண்டும்” என்றார்

தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வரவுள்ளதாக நியூஸ் 18 பேட்டியில் அமித்ஷா சொன்னது குறித்த கேள்விக்கு, “அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை, அவர்களும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதிமுக அமைக்கும் கூட்டணி வெற்றி பெறும். அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

அதிமுக கூட்டத்தில் தவெக தொண்டர்கள் கொடியை காட்டியதற்காக தொண்டர்கள் பிள்ளையார் சுழி போட்டதாக சொன்னேன். எங்கள் கட்சி கூட்டத்திற்கு விருந்தாளி போல வந்தவர்கள் தவெக தொண்டர்கள். அவர்களை வேண்டாம் என சொல்ல முடியுமா?” என கூறினார் உங்கள் வீட்டுக்காரர்கள் மூணு பேர் வருகிறேன் என்று சொல்கிறார்கள் என்று டிடிவி சசிகலா ஓபிஎஸ் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு எதற்கு உளை வைப்பதற்காக? ஏற்கனவே நாங்கள் படிக்கிற நம்பளும் பத்தலையா இப்படிப்பட்ட நிலைமைக்கு அவங்க தானே காரணம் என்றார்.

Tags: AIADMKEdappadi Palaniswamiopssengottaiyanttv
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தேவர் சிலை அருகில் ‘தவெக வாழ்க’ முழக்கம் – புஸ்ஸி ஆனந்த் நடவடிக்கையில் சர்ச்சை !

Next Post

2026 தேர்தல் தோல்விக்கான காரணம் தேடும் திமுக : இபிஎஸ் கடும் விமர்சனம்

Related Posts

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்
News

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்
News

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்
News

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்
News

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026
Next Post
2026 தேர்தல் தோல்விக்கான காரணம் தேடும் திமுக : இபிஎஸ் கடும் விமர்சனம்

2026 தேர்தல் தோல்விக்கான காரணம் தேடும் திமுக : இபிஎஸ் கடும் விமர்சனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

February 12, 2026
தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியின் தலைமையும், DMKவின் தலைமையும் இணைந்து முடிவு

தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியின் தலைமையும், DMKவின் தலைமையும் இணைந்து முடிவு

January 30, 2026
கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

January 18, 2026
உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் – வெகு விமர்சையாக நடத்தப்பட்டது

உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் – வெகு விமர்சையாக நடத்தப்பட்டது

January 4, 2026
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

0
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

0
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

0
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

0
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026

Recent News

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.