லெபனானின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் ராணுவத்திற்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையேயான போர், கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்றது. அண்மையில் இருதரப்பிற்கும் இடையே, போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
ஆனாலும், ஹமாஸ் அமைப்பினரின் ஆயுத கிடங்குகளை குறிவைத்து, இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள, அரபு சலீம் பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். ஹமாஸ் அமைப்பின் ஆயுத கிடங்கை குறிவைத்து, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.















