July 18, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

துரைமுருகன் வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன் ? – ஐகோர்ட் கேள்வி

by Priscilla
October 22, 2025
in News
A A
0
துரைமுருகன் வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன் ? – ஐகோர்ட் கேள்வி
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

அமைச்சர் துரைமுருகன் மீது பதிவு செய்யப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கை வேலூரிலிருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதற்கான காரணத்தை விளக்குமாறு, காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2006 முதல் 2011 வரை திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், வருமானத்தை விட அதிகமாக ரூ.1 கோடி 40 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் சேர்த்ததாக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது.

அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், இருவரையும் 2017 ஜனவரி மாதத்தில் வேலூர் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.

அந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வேலூர் நீதிமன்றத்தின் விடுவிப்பு உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரித்து ஆறு மாதங்களில் முடிக்க உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து வழக்கை சென்னை ஊழல் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

பின்னர் 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில் வழக்கை மீண்டும் வேலூருக்கு மாற்றக் கோரி துரைமுருகன் மற்றும் அவரது மனைவி மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து துரைமுருகன் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில், துரைமுருகன் தரப்பு, சொத்துக்குவிப்பு வழக்கில் விடுவித்த உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் தற்போது விசாரணைக்கு தடை விதித்துள்ளதாக தெரிவித்தது.

மனுவுக்கு பதில் அளிக்க லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் கால அவகாசம் கோரிய நிலையில், நீதிபதி சதீஷ்குமார் விசாரணையை நவம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், வழக்கை வேலூரிலிருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதற்கான விரிவான விளக்கத்தை காவல்துறை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

Tags: Chennai Special Courtdmkdurai muruganhigh courttn politics
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை மேலையூர் கிராமத்தில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல்&கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் நகர்வு பணி

Next Post

கடன் சுமையால் விபரீத முடிவு – 4 பேர் பலி

Related Posts

திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026
Next Post
கடன் சுமையால் விபரீத முடிவு – 4 பேர் பலி

கடன் சுமையால் விபரீத முடிவு - 4 பேர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026

Recent News

திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.