ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 79.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரச் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கும் போது, ஆளுநராக இருந்தவர் சத்யபால் மாலிக். இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 2018 முதல் 2019-ம் ஆண்டுவரை ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநராக சத்யபால் மாலிக் பதவி வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினராகவும், முன்னாள் மத்திய இணையமைச்சராகவும் அவர் பதவி வகித்துள்ளார். கோவா, மேகாலயா, பீகார் மாநிலங்களின் ஆளுநராகவும் சத்யபால் மாலிக் பதவி வகித்துள்ளார்.
அவருடைய மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.