“அம்மா… நான் திருடன் இல்ல…” — சிப்ஸ் பாக்கெட்டுக்காக திட்டியதில் உயிரை கொடுத்த 7ம் வகுப்பு மாணவன்

மேற்கு வங்கம் :

மேற்கு வங்க மாநிலம் பஸ்சிம் மெதினிபூர் மாவட்டம் பன்சுகுரா பகுதியில், திருட்டுப்பழியால் மனவேதனை அடைந்த 7ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரிஷேந்து தாஸ் என்ற 12 வயது சிறுவன், கோசைபர் பஜாரில் உள்ள ஒரு கடையில் வெளியே வைக்கப்பட்டிருந்த சிப்ஸ் பாக்கெட்டை எடுத்துள்ளார். அதற்கான பணத்தை செலுத்த கடைக்காரரைத் தேடிய போதும், அவர் அருகில் இல்லை என்பதையே தெரிந்தது. பணம் கொடுக்க கடைக்காரர் வரும்வரை காத்திருந்த சிறுவனை, பின்னர் வந்த கடைக்காரர் திருட்டு செய்ததாகத் தவறாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையடுத்து, சிறுவனின் தாயாரிடம் புகார் கூறப்பட்டு, அவரும் மகனை திட்டியதுடன், மக்கள் முன்னிலையில் மன்னிப்புக் கேட்கவும் வற்புறுத்தப்பட்டது. மனமுடைந்த சிறுவன், “நான் திருடன் இல்ல… காசு கொடுக்க காத்திருந்தேன்” என்று மீண்டும் மீண்டும் கூறினாலும், யாரும் அவன் வார்த்தைகளை நம்பவில்லை.

இந்த அவமானத்தை தாங்க முடியாத கிரிஷேந்து, வீட்டிற்கு சென்று கதவை பூட்டி வைத்து, பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தியுள்ளார். கதவு நீண்ட நேரம் திறக்காததைப் பார்த்த தாய், அண்டைவீட்டு மக்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, சிறுவன் மயக்க நிலையில் இருந்துள்ளார். உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறக்கும் முன் கிரிஷேந்து எழுதிய கடிதத்தில், “அம்மா, நான் திருடவில்லை. சிப்ஸ் எனக்கு பிடிக்கும். பணம் கொடுக்க காத்திருந்தேன். என்னை மன்னித்துவிடுங்கள்…” என எழுதியிருந்தது. அந்தக் கடிதம் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தற்கொலை தீர்வல்ல. மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் ஏற்பட்டால், உடனே உதவி பெறலாம் :

தமிழ்நாடு சுகாதார சேவை உதவி மையம் : 104

சினேகா தற்கொலை தடுப்பு மையம் : 044-24640050

Exit mobile version