புதுடெல்லி : நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின் படி, இந்தியாவில் இதுவரை 4,866 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 564 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது. அதே நேரத்தில், 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்றதும் கவலையளிக்கிறது.
பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்கள் – கேரளா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் தமிழகம் ஆகும். இம்மாநிலங்களில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
மாநில வாரியாக பாதிப்பு : கர்நாடகம் – 112 பேர், தமிழகம் – 213 பேர்
இவர்கள் தற்போது மருத்துவ கவனிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழப்பு விவரம்: மஹாராஷ்டிரா – 3 பேர், டில்லி – 2 பேர், கர்நாடகம் – 2 பேர்
உயிரிழந்த 7 பேரில் 6 பேர் முதியவர்களாக இருந்ததுடன், அவர்களுக்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், நிமோனியா போன்ற முன்னிலையிலான நோய்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ வல்லுநர்கள் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றவும், நிதானமாக செயல்படவும் அறிவுறுத்தி வருகின்றனர்.