மயிலாடுதுறை அருகே கஞ்சாநகரம் கிராமத்தில் புனித அந்தோணியார் கோயிலில் 30- ஆம் ஆண்டு திருவிழா

மயிலாடுதுறை அருகே கஞ்சாநகரம் கிராமத்தில் புனித அந்தோணியார் கோயிலில் 30- ஆம் ஆண்டு திருவிழா; மின்னொலியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித மேரிமாதா, புனித அந்தோனியார் மற்றும் புனித சம்முன்ஸ் சொரூபங்கள் வீதி உலா:-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம் கிராமத்தில் புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் 30-ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஆத்துகுடி பங்குத்தந்தை மரியதாஸ் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து, மின் ஒளியில் அலங்கரிக்கப்பட்ட 3 திருத்தேர்களில்
புனித மேரிமாதா புனித அந்தோனியார் மற்றும் புனித சம்முன்ஸ் சொரூபங்கள் தனித்தனியே எழுந்தருளச் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது. வீடுகள் தோறும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மாலை அணிவித்தும் வழிபாடு நடத்தினர். வானவேடிக்கை வழங்க விடிய விடிய தீர்ப்பவனி நடைபெற்றது.

Exit mobile version