தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சுங்கரஹள்ளியை சேர்ந்தவர் சரவணன்,22. டிரைவர். கெட்டூர் பகுதியை சேர்ந்த செந்தமிழ்,19; கல்லூரி மாணவர்: இவர்கள் இருவரும், 17 வயது, 2 பள்ளி சிறுமிகளை திருமணம் செய்து கொள்வதாக கூறி, அச்சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் பழகியுள்ளனர்.பின் ஆசை வார்த்தை கூறி அவர்களை ஆபாச படம் எடுத்துள்ளார்கள் .ஆபாச படத்தை பெத்தானூரை சேர்ந்த டிரைவர் வெங்கடேஷ்,24 ;க்கு அனுப்பி உள்ளார்கள்.இதை வைத்து மூவரும் அச் சிறுமிகளை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச் சொல்லி மிரட்டி உள்ளனர்.பின் வாட்ஸ் அப் குரூப்பில் போட்டுள்ளனர்.
இதையடுத்து சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் படி பொம்மிடி போலீசார் செந்தமிழ்,19; வெங்கடேஷ்,24; சரவணன்,22; ஆகிய மூவரையும் போக்சோவில் கைது செய்தனர்.