தமிழக கூட்டுறவு வங்கிகள் உங்களுக்கு ஒரு அற்புத வாய்ப்பைத் தர போறாங்க, பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு மின்சார ஆட்டோ வாங்க 3 லட்சம் ரூபாய் வரை கடன் கொடுக்குறாங்க.
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ, 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், 933 கிளைகளுடன் செயல்பட்டு வருது. இதுல, நகைக்கடன், பயிர்க்கடன் உட்பட பல்வேறு பிரிவுகளில் கடன்கள் கொடுக்குறாங்க..
ஏற்கனவே , வாகன கடன் பிரிவில், அரசு பணியாளர்களுக்கு மோட்டார் பைக், கார் வாங்குவதற்கு கடன் வழங்கும் திட்டம், கடந்த ஆண்டில் துவக்கப்பட்டுச்சி. இப்போ , தனிநபருக்கும் வாகன கடன் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுருக்கு. அதன் அடிப்படையில, பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிர், மின்சார ஆட்டோ வாங்க, தலா 3 லட்சம் ரூபாய் கடன் வழங்கும் திட்டம் தொடங்கபட்ருக்கு. நடப்பாண்டில், 1,000 மகளிருக்கு கடன் வழங்கப்படவும் இருக்காங்க….
அதாவது, மகளிருக்கு, 9 சதவீத வட்டியில், 3 லட்சம் ரூபாய் வரை கடன் கொடுக்க போறாங்க. இந்த ஒரு அரிய வாய்ப்பை யாரு மிஸ் பண்ணிடாதீங்க…