12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடையை சட்டமன்ற உறுப்பினர் வி ஜி ராஜேந்திரன் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் 12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடையை சட்டமன்ற உறுப்பினர் வி ஜி ராஜேந்திரன் திறந்து வைத்தார்.

2024-25ம் ஆண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில்
ரூபாய் 12 லட்சம் 50 ஆயிரம் மதிப்பீட்டில் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட புங்கத்தூர் 15 வது வார்டில் கழிப்பறைவுடன் கட்டப்பட்டுள்ள புதிய ‌நியாய விலை கட்டிடத்தை திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இதில் திருவள்ளூர் நகர் மன்ற தலைவர், உதயமலர் பாண்டியன், நகர்மன்றத் துணைத் தலைவர், சிசு.ரவிச்சந்திரன், முன்னாள் நகர மன்ற தலைவர் பொன் பாண்டியன்
15வது வார்டு கிளை கழக செயலாளர் செல்வ குமரன், நியாய விலை கடை ஊழியர்கள் வேலு குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version