தமிழ்நாடு ஏரி மற்றும் அற்று ப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில், இன்று காலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்காச்சோள சாகுபடியில் ஏற்பட்ட இழப்புகளுக்கான பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும், தொடர்ந்து பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள மற்றும் நெல் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், நெல்லை மாநில அரசு கொள்முதல் செய்வது போல் மக்காச்சோளத்தையும் மாநில அரசு ரூ.3500 க்கு குவின்டாலுக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், தூர்வாரப்படாத ஏரிகள், குளங்கள், பாசன வாய்க்கால்கள் – குறிப்பாக மணிமுத்தாறு, கெடிலம், தென்பெண்ணையாறு மற்றும் கிளை வாய்க்கால்கள் – அனைத்தும் தூர்வாரி புனரமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அணைக்கட்டுகளில் மதகுகள் மறுசீரமைக்கப்பட வேண்டும், நந்தன் கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றி அந்தப் பகுதியில் உள்ள பாசன விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4000, நெற்கு குவின்டாலுக்கு ரூ.3500 என தேர்தல் அறிவிப்பின்படி விலை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து, விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.