பள்ளி மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய விழுப்புரம் எம்எல்ஏ
டாக்டர் லட்சுமணன்
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே கல்லப்பட்டு கிராமத்திற்கு கூடுதல் புதிய பேருந்து இயக்கி பொதுமக்களோடு பயணச்சீட்டு எடுத்து பயணம் செய்த விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன்

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள கல்லப்பட்டு கிராமத்துக்கு மாலை நேரத்தில் பள்ளி கல்லூரி முடிந்து வேலைகளுக்கு சென்று வரும் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாலை நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என்று விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் அவர்களிடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில் இன்று அரசு பேருந்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடி அசைத்து துவக்கி வைத்து இனிப்பு வழங்கி மேலும் பொது மக்களோடு பேருந்தில் உடன் வந்த அனைவருக்கும் பயணச்சீட்டு எடுத்து பயணம் செய்தார் இந்நிகழ்வில் அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் மாநில ஆதிதிராவிடர் நல குழு இணை செயலாளர் புஷ்பராஜ் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்