தேமுதிக கட்சியின் மண்டல மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் விழுப்புரம் ஸ்ரீ ஆஞ்சநேயா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தேமுதிக விழுப்புரம் மாவட்ட செயலாளருமான எல். வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மண்டல பொறுப்பாளர் பார்த்தசாரதி கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார். “கூட்டணி விவகாரத்தை கட்சி தலைமை பார்த்துக்கொள்கிறது. தொண்டர்கள் விரும்பும் கூட்டணியை தலைமையினரே அமைப்பார்கள், அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை” எனத் தெரிவித்தார்.
மேலும், “திமுக, அதிமுக ஆகியவை பணம் கொடுக்கின்ற கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளன. தமிழகத்தில் அமலாக்கத் துறை சோதனை செய்தது உண்மை. ஆனால், அதற்கான தண்டனை குறித்து உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வெறும் பார்வையாளராக உள்ளன” எனக் குறிப்பிட்டார்.
“தவறு செய்தால் தண்டனை கட்டாயம் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் அரசியல்வாதிகளும் மக்களும் தவறு செய்ய பயப்படுவார்கள்” என்றார் பார்த்தசாரதி.