மாமாகுடி பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் மாமாக்குடி கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது கடந்த ஏழாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா நாள்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அபிஷேகம் அலங்காரத்துடன் அம்மன் காட்சி அளிக்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இந்நிலையில் தீமிதி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது முன்னதாக அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது பின்னர் தீக்குண்டம் அருகில் அம்மன் எழுத்தருளி காட்சி அளிக்க விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர் பின்னர் அம்மன் வீதி உலா காட்சியும் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் வழிபாடு செய்தனர்.