நாடு முழுவதும் இன்று 11வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலையில் மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் தாம்பரம் விமானப்படை சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது., இதில் ஆண்-பெண் வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் என 250பேர், படைப்பிரிவின் கமாண்டோ ரகுராமன் தலைமையில் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.,
கோவை ஈஷா யோகா மையத்தினர் யோகாசன மாஸ்டர்ஸ் யோகாசனங்கள் செய்தனர்.
இதேபோல் மாமல்லபுரம் புலிக்குகை வளாகத்தில் இந்திய சுற்றுலாத்துறை மற்றும் தொல்லியல்துறை இணைந்து நடத்திய யோகா நிகழ்ச்சி நடைபெற்றது., அதில் பெண்கள், சிறுவர்கள் என 200பேர் பங்கேற்றனர். சுற்றுலாத்துறை அதிகாரி பத்மாவதி, தொல்லியல்துறை அலிகாரி சத்தியம், சுஜன்னா, ஸ்ரீதர், அபிராமி யோகாலயா சுரேஷ், உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஐந்துரதம் வளாகத்தில் தொல்லியல்துறை ஊழியர்கள், காவலாளிகள், கல்லூரி மாணவர்கள் என 200பேர் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 6:30க்கு துவங்கிய இந்த யோகா நிகழ்ச்சிகள் 8மணி வரை நடைபெற்றது.