மயிலாடுதுறையில் தூய்மை பணியாளர்கள் எல்.டி.யு.சி. சங்கத்தினர் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம்.

சென்னை அம்பத்தூரில் பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தின் காரணமாக கைது செய்யப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறையில் தூய்மை பணியாளர்கள் எல்.டி.யு.சி. சங்கத்தினர் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம். தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அம்பத்தூர் 5 மற்றும் 6 ஆகிய மண்டலங்களில் பணிபுரிந்த தூய்மை பணியாளர்களை சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் பணி நீக்கம் செய்த நிலையில், அந்த தொழிலாளர்கள் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நாளை சுதந்திர தின விழா நடைபெற உள்ளது முன்னிட்டு, ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்தும், தொழிலாளர்களின்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், வேலையிழந்த தூய்மை பணியாளர்களுக்கு உடனடியாக பணி வழங்க வலியுறுத்தியும், அரசாணை எண் 62-ஐ தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்த வலியுறுத்தியும் மயிலாடுதுறையில் எல்.டி.யு.சி. சங்கம் சார்பில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு பேரணியாக வந்த எல்டியுசி மாநில செயலாளர் வீரச்செல்வன் தலைமையில் அச்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னணியில் இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்தவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அனைவரையும் கைது செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழர் தேசிய முன்னணி மாவட்ட தலைவர் முரளிதரன், தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் கோபிநாத் உள்ளிட்ட ஒருமித்த கருத்துடைய கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில், நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version