பள்ளி முன்னாள் மாணவர்களின் பக்ரீத் சந்திப்பு

மயிலாடுதுறையில் 12 ஆண்டுகளாக மத நல்லிணக்கத்தோடு தொடரும் பள்ளி முன்னாள் மாணவர்களின் பக்ரீத் சந்திப்பு:- இஸ்லாமிய நண்பரின் வீட்டில் அனைத்து மதத்தைச் சேர்ந்த நண்பர்கள் கறிவிருந்து உண்டு, பள்ளிப்பருவ நினைவுகளை மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டனர்:-

மயிலாடுதுறையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியான தேசிய மேல்நிலைப் பள்ளியில் 1995-ஆம் ஆண்டுமுதல் 2000-ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் பக்ரீத் சந்திப்பை 12 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை சின்ன பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அமீன் மற்றும் அவருடன் பள்ளியில் படித்த நண்பர்கள் ஒத்துழைப்புடன் வருடம்தோறும் பக்ரீத் பண்டிகை விழாவை முன்னிட்டு நண்பர்கள் சங்கமிக்கும் ஒன்று கூடல் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் 40-க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொண்டு, வருடம்தோறும் மாணவர்களை ஒருங்கிணைக்கும் அமீனுக்கு வாழ்த்து தெரிவித்தும் அனைவரும் அளாவலாவி மகிழ்ந்தனர். தொடர்ந்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து கறி விருந்து சாப்பிட்டு, பிரிய மனமின்றி, மீண்டும் அடுத்த வருடம் சந்திக்க உள்ள நிகழ்வை எண்ணி மகிழ்ச்சியுடன் பிரியா விடை பெற்று சென்றனர்.

Exit mobile version