மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காழியப்பநல்லூர் தில்லையாடி திருக்கடையூர் கீழ்மாத்தூர் உட்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் எள் சாகுபடி செய்து வந்தனர். இடைப்பட்ட காலங்களில் எள் சாகுபடி செய்வதை பெரும்பாலான விவசாயிகள் தவிர்க்கும் நிலை ஏற்பட்டது. காரணம் எள் சாகுபடியில் போதிய மகசூல் இல்லாமல் போதிய வருவாய் இல்லாமல் காரணமாகவும் தவிர்க்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் தற்பொழுது மீண்டும் கடந்த சில ஆண்டுகளாக காழியப்பநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆர்வத்துடன் எள் சாகுபடி செய்ய ஆரம்பித்துள்ளனர். வெளிமாநிலத்தில் இருந்து 8 பட்டை எள் விதைகள் வாங்கி வந்து தற்போது சாகுபடி செய்து வருகின்றனர். எள் சாகுபடி செய்து அறுவடை செய்து தானே தனது சொந்த செக்கு பட்டறையில் எள் காயவைத்து அதனை பதப்படுத்தி அதனுடன் வெல்லம் சேர்த்து செக்கில் அறைத்து எண்ணெய் தயாரிப்பு பாரம்பரிய முறையில் தூய்மைப்படுத்தி மதிப்பு கூட்டி தானே விற்பனை செய்து வருகிறார் விவசாயி பழனியப்பன், அவர் தெரிவித்த முறையில் எள் சாகுபடி செய்வதற்கு குறைந்த தண்ணீர் போதுமானது மேலும் தற்பொழுது வெளிமாநிலத்திலிருந்து 8 பட்டை எள் விதைகள் வாங்கி வந்து சாகுபடி செய்து அறுவடை செய்து நல்ல மகசூல் கிடைப்பதாகவும் தானே அறுவடை செய்து தனது சொந்த செக்கில் எண்ணெய் தயாரித்து பொதுமக்களிடம் நேரடியாக விற்பனை செய்வதாகவும் மற்ற எண்ணெய்களை விட எள் மூலம் கிடைக்கும் நல்லெண்ணெய் அதிகம் விற்பனையாவதாகவும் தற்பொழுது பொதுமக்கள் அதிகம் நல்லெண்ணெய் பயன்படுத்துவதாகவும் அதனை விரும்பி வாங்கி செல்வதாகவும் கூறுகிறார்.
கடலை மூலம் கிடைக்கும் எண்ணெய் கடலை எண்ணெய் தேங்காய் மூலம் கிடைக்கும் எண்ணெய் தேங்காய் எண்ணெய் என்ற பெயரும் ஆனால் மகத்துவம் கொண்ட மருத்துவ குணம் கொண்ட பெண்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய இதயத்திற்கு மருந்தாக பயன்படக்கூடிய உடல் சூட்டை தணிக்க கூடிய தினமும் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய உள் மற்றும் புறம் இரு பக்கமும் பயன்படுத்தக்கூடிய பல்வேறு நற்பண்புகள் கொண்ட எள் எண்ணெய் நல்லெண்ணெய் என பெயர் கொண்டு விளங்குவதாகும் இந்த மகத்துவம் கொண்ட நல்லெண்ணெய் இதன் மருத்துவ குணத்தை அறிந்து தினமும் விற்பனை செய்வதாகவும் கூறுகிறார். தற்பொழுது நிறைய விவசாயிகள் சொந்தமாக செக்கு வைத்து அதன் மூலம் நல்லெண்ணெய் தயாரித்து விற்பனை செய்வதாகவும் கூறும் விவசாயி பழனியப்பன் இயற்கையில் செக்கு மூலம் எள் அரைத்து எண்ணெய் ஆக்கி நல்லெண்ணெயாக விற்பனை செய்கின்றனர் செக்கில் அரைத்து விற்கப்படும் நல்லெண்ணெய் நற்பண்புகள் நற்குணங்கள் மகத்துவம் கொண்ட மகத்துவம் குணம் கொண்டது என்றும் கூறுகிறார்.