திருவள்ளூரில் 108 யோகா ஆசனங்கள் செய்து மாற்றுத்திறனாளிகள்,மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில் ஹேப்பி யோகா ஹெல்த் கேர் சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மன வளர்ச்சி குன்றியோருக்கான யோகாசனம் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாற்றுத் திறனாளிகள் மற்றும்,மனவளர்சி குன்றியோரை ஊக்குவிக்கும் விதமாகவும் அவர்களால் யோகா மூலம் உடல் ஆரோக்கியமாக வைத்துகொள்ள முடியும் என்பதனை உணர்த்தும் வகையில் யோகா பயிற்சியாளர்கள் செந்தில்குமார் மற்றும் கீதா ஆகியோரது ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கண்பார்வையற்றோர்,போலியோவால் பாதிக்கபட்டவர்கள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், காலிபர் உபயோகிப்பவர்கள், உடல் வளர்ச்சி குன்றியவர்கள், காது மற்றும் வாய் பேச முடியாதவர்கள்,விபத்தில் கை-கால் இழந்தவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று ஒரே நேரத்தில் 108 யோகா ஆசனங்கள் செய்து நோவா உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற செய்தனர். மாற்றுத்திறனாளிகள் ஒரே நேரத்தில் 108 யோகா ஆசனங்கள் செய்தது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.பார்வையாளர்கள் அனைவரையும் வெகுவாக பாராட்டினர்.பங்கேற்ற வர்களுக்கு பரிசுகளையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வழங்கினர்.