சீர்காழி அருகே பழையார் முதல் கொட்டாயமேடு வரை சாலையோர தடுப்பு சுவர் அமைக்கபடாததால் பயனற்று கிடக்கும் கிழக்கு கடற்கரை சாலை.
ரூபாய் 7 கோடி மதிப்பில் அமைக்கபட்ட சாலையில் பல ஆண்டுகளாக இருசக்கர,மற்றும் இலகுரக வாகங்கள் மட்டுமே செல்லும் அவலம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கடலோர கிராமமான பழையாரில் இருந்து கொட்டாயமேடு கிராமம் வரை 5 கி.மீ தூரம் கிழக்கு கடற்கரை சாலை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கபட்டது.பல ஆண்டுகள் நடைபெற்ற பணி கடந்த 2018 ஆண்டு பணிகள் முழுமை பெறாமலே நிறுத்தபட்டது. சாலை அமைக்கபட்டும் சாலையின் இருபுறமும் மண்சரிவை தடுக்கும் தடுப்புச்சுவர் அமைக்கபடவில்லை. பேருந்து மற்றும் கனரக வாகன போக்குவத்திற்கு மீனவர்கள் வாகன போக்குவரத்திற்கும் பயன்படுத்தி வந்ததனர். இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட கனமழையால் சாலையோர மண் அரிப்பு ஏற்பட்டு அவ்வழியே சென்ற அரசு பேருந்து மற்றும் மீனவர்கள் சென்ற லாரி அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து இச்சாலை கனரக வாகன போக்குவரத்துக்கு பயன் இல்லாமல் போனது. அவ்வப்போது சாலையோர மண்சரிவை சீரமைத்தாலும் நிரந்தர தடுப்புச்சுவர் அமைக்கபடாததால் ரூபாய் 7 கோடியில் அமைக்கபட்ட கிழக்கு கடற்கரை சாலை இருசக்கர,இலகுரக வாகனங்கள் மட்டுமே செல்லும் அவல நிலையில் உள்ளது.ஆபத்தான நிலையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் இரு புறமும் தடுப்புச் சுவர்கள் அமைத்தும் சாலையை புதுப்பித்தும் வாகன போக்குவரத்து துவங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்,.