சுருண்டு விழுந்த பெண்மணியை தாங்கி பிடித்து தூக்கிச் சென்று உதவிய ஆயுதப்படை பெண் காவலர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காடு பகுதியைச் சேர்ந்தவர் பைரவி. சிறு வயது முதல் வாத நோயால் ஒரு கால் ஒரு கை பாதிக்கப்பட்டவர். அடிக்கடி கால் நடக்க முடியாமல் பாதிப்பு ஏற்படும். தான் நடப்பதற்கு ஏதுவாக காலனி (ஷூ) வாங்குவதற்காக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறைக்கு தனியாக வந்துள்ளார். ஆட்சியர் அலுவலக வாயிலில் படி ஏறும்போது கால் நரம்பு பிடித்த இழுத்ததால் நடக்க முடியாமல் கீழே விழுந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சந்தியா என்ற ஆயுதப்படை பெண்காவலர் ஓடோடி சென்று அந்தப் பெண்மணியை கீழே விழாமல் தாங்கிப் பிடித்து காலை பிடித்து நீவி விட்டு அங்கிருந்து தூக்கி சென்று நாற்காலியில் அமர வைத்து காலை பிடித்து முதலுதவி செய்தார்.

அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் வந்த பிசியோதெரபிஸ்ட் ஒருவர் முதலுதவி செய்த நிலையில் பைரவியர் நடக்க முடியாததால் போலீசார் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து பைரவியை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் கீழே விழுவதை பார்த்து சற்றும் தாமதிக்காமல் ஓடிச்சென்று தாங்கி பிடித்து காலை பிடித்து முதலுதவி செய்த காவலர் சந்தியாவின் பணி அனைவரின் பாராட்டை பெற்றது.

Exit mobile version