கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், மேகதாதுவில் காவிரியில் அணைகட்ட நடவடிக்கை எடுக்கும் கர்நாடகா அரசை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பு :-
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலின் பொழுது தமிழக வெற்றி கழகம் சார்பில், ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பெற்றுள்ள கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் சமீபத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கூட்டுறவு கடன் தள்ளுபடி குறித்து அறிவிக்கப்பட்டிருந்ததில் ஒரு லட்ச ரூபாய் வரை கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு ஐந்தாயிரம் வரை மட்டுமே தள்ளுபடி என அறிவிக்கப்பட்டு இருந்தது இந்த அறிவிப்பிற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், முதலமைச்சர் அறிவிப்பை வாபஸ் பெற கோரியும், காவிரி ஆற்றில் மேகதாதுவில் அணைகட்ட நடவடிக்கை எடுக்கும் கர்நாடகத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் துரைராஜ் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பேட்டி
அன்பழகன்
டெல்டா பாசன விவசாய சங்க மாவட்ட தலைவர்.
