உலகின் மிகச் சிறிய நாடுகள் பட்டியலில் பெரும்பாலானோருக்கும் ஞாபகத்தில் இருப்பது வாடிகன் நகரம் தான். ஆனால் வாடிகனையும் விட சிறியதொரு “நாடு” இருப்பதைப் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த நாட்டின் பெயர் சீலேண்ட் (Sealand).
சீலேண்ட் என்பது ஒரு நாட்டு மாதிரியே இருந்தாலும், அது உண்மையில் ஒரு பழைய ராணுவ கோட்டையில், அதுவும் நடுக் கடலில் இயங்குகிறது. இந்நாட்டில் வாழும் மக்களின் எண்ணிக்கை — வெறும் 27 பேர் மட்டுமே!
1967ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் ராணுவத்திற்கு உட்பட்ட அந்தக் கட்டிடத்தை கைப்பற்றி, Major Paddy Roy Bates என்பவர், இதை சுயாதீன நாடாக அறிவித்தார். மேலும், தன்னை “பிரின்ஸ் ஆஃப் சீலேண்ட்” என்று அழைத்து, தனது குடும்பத்துடன் அங்கு குடியேறினார்.
சீலேண்டுக்கு தனியொரு கொடி, முத்திரை, பாஸ்போர்ட், ரெஜிஸ்டர், மற்றும் விசா நடைமுறைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அங்கு வர விரும்பும் யாரும், விசா பெறவேண்டும் என்ற கடுமையான நிபந்தனையும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நாடு முழுவதும் Roy Bates குடும்பமே நிர்வகிக்கிறது. பாதுகாப்பு, நிர்வாகம், மற்றும் அரசாங்கம் அனைத்தும் அவர்களது கைவசமே. எனவே இது ஒரு குடும்ப அரசாகவே இயங்கி வருகிறது.
ஆனால், இந்த சுயாதீன அறிவிப்பை ஏதேனும் ஒரு சர்வதேச அமைப்பு அல்லது நாடும் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கவில்லை. அதாவது, சர்வதேச சட்டப்படி சீலேண்ட் ஒரு “நாடு” என ஏற்கப்படவில்லை.
இருப்பினும், ஒரு நாட்டுக்கே தேவையான அனைத்து அடிப்படை அம்சங்களையும் வைத்துள்ள சீலேண்ட், மிகவும் சிறிய அளவில் செயல்பட்டு, இன்று வரை உலகிற்கு ஒரு அதிசயமான சிறு நாடாக விளங்கிக் கொண்டிருக்கிறது.