மயிலாடுதுறை அருகே புனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காடு ஊராட்சி டி.பண்டாரவாடை கிராமத்தில் புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 61-ஆம் ஆண்டு தேர் பவனி திருவிழா கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று இரவு பேண்ட் வாத்தியம் இசை நிகழ்ச்சியுடன் வாணவேடிக்கைகள் முழங்க மலர் மற்றும் மின்அலங்காரத்துடன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் புனித அந்தோணியார் எழுந்தருளி கிராம மக்களுக்கு காட்சியளித்தார்.

பின்னர் தேர் பவனி திருவிழா நடந்தது. முன்னதாக ஆலயத்தில் இருந்து தொடங்கிய தேர்பவனி டி.பண்டாரவாடை, திருவாலங்காடு, மாதாகோவில் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து ஆலயத்தை வந்தடைந்தது. அப்போது இறை மக்கள் தங்கள் வீடுகள் தோறும் சாம்பிராணி தூபம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி மாலை அணிவித்து வழிபாடு நடத்தினர். குத்தாலம் பங்குத் தந்தை சேவியர் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. இந்த நிகழ்வில் குத்தாலம், திருவாலங்காடு, டி.பண்டாரவாடை, மாதிரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு இறை ஆசி பெற்றனர். .

Exit mobile version