செங்கல்பட்டு அருகே விவசாய நிலத்தில் கழிவு நீர் திறந்து விட்டதால் தட்டி கேட்ட விவசாயிக்கு கொலை மிரட்டல்

செங்கல்பட்டு அருகே சிறுபினாயூர் கிராமத்தில் வசித்து வரும் ஜனார்த்தனம் இவர் அதே கிராமத்தில் தனது சொந்தமாக உள்ள பட்டா நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கும் அதே கிராமத்தில் உள்ள சிறுபினாயூர் ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி இவருடைய கணவர் மணி திமுக இளைஞரணி செயலாளராக உள்ள இவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுபினயூர் ஊராட்சி மன்ற தலைவர் கணவர் மணி தான் ஊராட்சி மன்ற தலைவர் என்று கூறிக்கொண்டு அடியாட்களை கையில் வைத்துக் கொண்டு விவசாயி செய்து வரும் ஜனார்த்தனம் பட்டா நிலத்தில்
அத்துமீறி சட்ட விரோதமாக நிலத்தில் கழிவு நீர் கால்வாய்களை அமைத்தது மட்டுமில்லாமல் நிலத்தில் 6 அடி கருங்கல் தூண்கள் நட்டு உள்ளனர். மேலும் கழனிக்கு செல்லும் வழியை மறைத்து பென்சிங் அமைக்கும் பொழுது விவசாயம் செய்து வரும் ஜனார்த்தனன் அவர்களுடைய மனைவி தேன்மொழி அவருடைய தாயார் மூவரும் சென்று ஏன் எங்கள் நிலத்தில் சட்டவிரோதமான செயல்களை செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் அவருடைய கணவர் மணி 10கும் மேற்ப்பட்ட அடியாட்களை வைத்து ஜனார்த்தனம் மீதம் அவருடைய மனைவி தேன்மொழி மீதும் தாயார் செங்கவல்லி ஆகியோர்கள் மீது கடுமையாகத் தாக்கியுள்ளார்கள் இதில் காயமடைந்த மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சாலவாக்கம் காவல்துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் திட்டமிட்டு ஜனார்த்தனனை பழி வாங்கும் நோக்கத்தில் இது போன்ற கழிவுநீர்களை விவசாய நிலத்தில் விடப்பட்டு நிலத்திற்கு செல்வக் கூடாது என்பதற்காக வேலியும் அமைக்கப்பட்டுள்ளது அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சாலவாக்கம் காவல் நிலையத்தில் ஜனார்த்தனம் புகார் கொடுத்துள்ளார் ஆனால் இதுவரை புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஊராட்சி மன்ற தலைவர் அவருடைய கணவர் மணி பதவியை பயன்படுத்தி Bdo மற்றும் சாலவாக்கம் போலீசை தங்களுக்கு சாதகமாக வைத்துக் கொண்டு அப்பாவி விவசாயிகளை விவசாயம் செய்யவிடாமல் தடுக்கின்றனர் என பாதிப்படைந்த ஜனார்த்தனம் குடும்பத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர். .

Exit mobile version