“நீங்கள் அழகாக உள்ளீர்கள்” – இத்தாலி பெண் பிரதமர் குறித்து பேசிய ட்ரம்ப் சர்ச்சையில் !

எகிப்தில் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாடு நடைபெற்றது. காஸா போரை முடிவுக்கு கொண்டு வரவும், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கான திட்டத்தை உருவாக்கவும் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த மாநாட்டில், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் உள்ளிட்ட 30 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மாநாடு நடைபெற்றபோது மேடையில் கூடியிருந்த தலைவர்களில் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியே ஒரே பெண் என்றது குறிப்பிடத்தக்கது. அப்போது காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானபோது பேசிக் கொண்டிருந்த ட்ரம்ப், மெலோனியை “அழகான இளம்பெண்” என அழைத்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ட்ரம்ப் தனது உரையில், “இத்தாலியில் ஒரு இளம்பெண் இருக்கிறார்… அவர் மிகவும் அழகானவர். இதையே நான் அமெரிக்காவில் சொன்னிருந்தால் என் அரசியல் வாழ்க்கை முடிந்திருக்கும்,” எனக் கூறினார். பின்னர் புன்னகைத்துக் கொண்டிருந்த மெலோனியை நோக்கி, “நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே? நீங்கள் இங்கே வருவதற்கு நன்றி. நாங்கள் அதை மதிக்கிறோம். இத்தாலியில் அவரை மக்கள் உண்மையிலேயே மதிக்கிறார்கள்; அவர் மிகவும் வெற்றிகரமான தலைவி,” எனப் புகழ்ந்தார்.

79 வயதான ட்ரம்ப், 48 வயதான மெலோனி குறித்து கூறிய இந்த கருத்து சமூக வலைதளங்களில் கடும் எதிர்வினையை கிளப்பியுள்ளது. “இது சர்வதேச அவமானம். ஒரு முக்கியமான அமைதி மாநாட்டில் உலக பெண் தலைவரை இவ்வாறு விவரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது,” என பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சிமாநாடு ஒரு அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது.

Exit mobile version