தலைக்கு மேல் மூன்று பெரிய பிரச்னைகள் – இந்தியா சரிசெய்யுமா ?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் (WTC) தொடர்ந்து இரு இறுதிப்போட்டிகளில் தோல்வியை சந்தித்த இந்தியா, 2025-27 சுழற்சியில் புதிய தலைமை, புதிய குழுவுடன் களமிறங்க இருக்கிறது. ஆனால், மூன்று முக்கிய பிரச்சனைகள் இந்திய அணியை சவாலாக எதிர்கொள்கின்றன.
2007-ல் முதல் முறையாக நடைபெற்ற T20 உலகக்கோப்பை வென்ற இந்தியா, WTC-வின் முதல் இரண்டு பதிப்புகளான 2021, 2023-இல் இறுதிப்போட்டியில் இடம்பிடித்து சாதனை படைத்தது. ஆனால், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து கோப்பை மட்டும் கை விட்டு விட்டது.
தற்போது, சொந்த மண்ணில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்ததும், மூத்த வீரர்கள் அஸ்வின், விராட், ரோகித் ஓய்வுபெற்றதும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பெரும் பின்னடைவாக அமைந்திருக்கிறது.
சுப்மன் கில்லின் தலைமையில் புதிய தலைமுறை – மாற்றுமுகம் காட்டுமா இந்தியா ?
இந்திய கிரிக்கெட்டின் புதிய தலைவர் சுப்மன் கில். இங்கிலாந்தில் தொடங்கவுள்ள 2025-27 சுழற்சி, அவருக்கான முதல் சோதனை. இளம் அணியாக இருப்பினும், திறமையான பல பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் உள்ளனர்.
ஆனால், இந்த அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல முடியுமா ? என்பதே தற்போதைய கேள்வி. காரணம், இந்திய அணிக்கு முன்னிலையில் உள்ள மூன்று முக்கிய பிரச்சனைகள் தான்.
நிலையான பந்துவீச்சு தாக்குதலின் பற்றாக்குறை
2016-21 காலக்கட்டம் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டின் பொற்காலம். பும்ரா, ஷமி, இஷாந்த், அஸ்வின், ஜடேஜா என உலகத் தரத்திற்கு இணையான பவுலிங் யூனிட் இருந்தது.
அதே நிலை தற்போது இல்லை :
ஷமி காயம், அஸ்வின் ஓய்வு, பும்ரா ஒரே வீரராக போராடுகிறார், ஜடேஜாவின் எதிர்காலமும் சந்தேகம் இந்தப் பின்னணியில், புதிய பவுலிங் யூனிட்டை உருவாக்குவது இந்தியாவின் மிகப்பெரிய அவசர தேவையாகியுள்ளது.
நம்பர் 3, நம்பர் 4 – யார் நிரந்தரமான பேட்ஸ்மேன்கள்?
புஜாரா – கோலி காலம் முடிவடைந்துவிட்டது. புதிய நம்பர் 3 மற்றும் 4 இடங்களில் யாரை நம்பலாம் என்பது தெளிவாகவில்லை. கே.எல். ராகுல், கருண் நாயர், சுப்மன் கில் ஆகியோர் போட்டியிலுள்ளாலும், யாருக்கு எந்த இடம் என்பது உறுதி செய்யப்படவில்லை. ரிக்கி பாண்டிங் கூறுவது போல, “ராகுல் நம்பர் 3, கில் நம்பர் 4, கருண் நாயர் நம்பர் 5” என பங்கீடு தெளிவாக நிர்ணயிக்கப்பட வேண்டும்.
கேப்டன்சி + மேட்ச் வின்னர்கள் தேவை
விராட் கோலியின் தலைமையிலான இந்தியா, பல மேட்ச் வின்னர்களைக் கண்டெடுத்தது. தற்போது, அந்தத் தன்மையை இளம் வீரர்கள் கட்டாயம் நிரூபிக்க வேண்டும்.
கேப்டனாக கில், தன் பேட்டிங் ஃபார்மையும் நிலைநிறுத்தவேண்டும் யஷஸ்வி, பண்ட், சர்பாஸ், ரஜத் படிதார் போன்ற இளம் வீரர்கள் மேட்ச் வின்னர்களாக மாற வேண்டும்
வெறும் திறமை போதாது – பரிட்சை தரும் தருணங்களில் முடிவளிக்கும் ஆட்டம் அவசியம்.