தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள சுமார் 9,923 ஏக்கர் பாசன நிலங்களின் பயனுக்காக, கடனா நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உள்ள விவரங்கள் பின்வருமாறு:
நீர்த்தேக்கம்: தென்காசி மாவட்டம், தென்காசி வட்டம், தர்மபுரம் மடம் மற்றும் சிவசைலம் கிராமங்களிலுள்ள கடனா நீர்த்தேக்கம். (டிசம்பர் 10, 2025) முதல் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை, அதாவது மொத்தம் 112 நாட்களுக்கு. நீரின் அளவு: நீர்த்தேக்கத்தின் நீர் இருப்பைப் பொறுத்து, வினாடிக்கு 125 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
இந்த நீர் திறப்பினால், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள மொத்தம் 9923.22 ஏக்கர் பாசனப் பரப்புகள் பயன்பெறும். குறிப்பாக, பின்வரும் கிராமங்களில் உள்ள பாசன நிலங்கள் நீரைப் பெறும்: தர்மபுரம் மடம், சிவசைலம், ஆழ்வார்குறிச்சி, I & II, மேல ஆம்பூர், கீழ ஆம்பூர், மன்னார்கோவில், திருவாலீஸ்வரம், பிரம்மதேசம், பள்ளக்கால், புதுக்குடி, பனஞ்சாடி, இரங்கசமுத்திரம், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஏற்ப இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.













