December 28, 2025, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பாலமேட்டில் மா மரங்களில் ‘விரியன்’ பூச்சித் தாக்குதல் விவசாயிகள் தீவிர மருந்து தெளிப்பு!

by sowmiarajan
December 28, 2025
in News
A A
0
பாலமேட்டில் மா மரங்களில் ‘விரியன்’ பூச்சித் தாக்குதல் விவசாயிகள் தீவிர மருந்து தெளிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மதுரை மாவட்டம் பாலமேடு மற்றும் அதன் சுற்றுவட்டார மலை அடிவாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பல நூறு ஏக்கர் மாந்தோப்புகளில், தற்போது பூச்சித் தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மருந்து தெளிக்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இப்பகுதிகளில் விளையும் தரமான மாம்பழங்கள் அருகிலுள்ள முடுவார்பட்டி சந்தை மட்டுமன்றி, திண்டுக்கல் மற்றும் மதுரை மார்க்கெட்டுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து வெளிமாநிலங்களுக்கும் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நடப்பாண்டு மா மரங்கள் பூக்கத் தொடங்கியுள்ள நிலையில், எதிர்பாராத பூச்சித் தாக்குதலால் மகசூல் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

மலை அடிவாரப் பகுதிகளில் நிலவும் தட்பவெப்ப நிலை மாற்றத்தால் பெரும்பாலான மரங்களில் பூக்கள் மற்றும் பிஞ்சுகள் பிடிக்கத் தொடங்கியுள்ளன. ஆனால், அதே வேளையில் இலைகள் மற்றும் பூக்களைச் சேதப்படுத்தும் பூச்சிகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இது குறித்துச் சரந்தாங்கி பகுதியைச் சேர்ந்த விவசாயி புகழ் மணி கூறுகையில், “தற்போது மா மரங்களில் ‘விரியன்’ பூச்சி எனப்படும் ஒரு வகை புழுக்களின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. இவை மா மரத்தின் தளிர் இலைகள் மற்றும் பூக்களைச் சேதப்படுத்துவதுடன், பிஞ்சுகளை முழுமையாகத் தின்று அழித்துவிடுகின்றன. பொதுவாக அதிக மழை பெய்தால் பூக்கள் கருகிவிடும் அபாயம் உண்டு. ஆனால் இந்தாண்டு கடும் பனிப்பொழிவு நிலவுவதால், பூச்சிகளின் பெருக்கம் ஜனவரி மாதத்திற்கு முன்பே தொடங்கிவிட்டது. இதனைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக மருந்து தெளிக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளோம்,” என்றார்.

வழக்கமாக மா சாகுபடியில் 20 நாட்களுக்கு ஒருமுறை பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்படும். ஆனால், தற்போது பூச்சிகளின் தீவிரம் அதிகமாக இருப்பதால், பல விவசாயிகள் 15 நாட்களுக்கு ஒருமுறை மருந்து தெளிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடும் பனிப்பொழிவு மற்றும் பூச்சித் தாக்குதலால் பூக்கள் உதிராமல் பாதுகாத்தால் மட்டுமே பிஞ்சுகள் நன்கு பிடித்து, வரும் கோடையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மருந்து தெளிப்பு மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகரித்துள்ள போதிலும், வெளிமாநில ஏற்றுமதியை நம்பியுள்ள விவசாயிகள் விளைச்சலைக் காக்கப் போராடி வருகின்றனர். தோட்டக்கலைத் துறையினர் உரிய ஆலோசனைகளை வழங்கினால் இந்தாண்டு மா விளைச்சலைச் சீராகப் பெற முடியும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: FARMERSinfestationmangopesticidestrees palamedu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

புதுச்சேரி மெரினா கடற்கரையில் ‘ரீல்ஸ்’ மோகத்தால் விபரீதம் போராட்டத்திற்கு பின் மீட்பு!

Next Post

தேசிய சீனியர் வாலிபால் போட்டி தமிழக அணிக்கு மதுரை வீராங்கனை ஜெயப்ரியா தேர்வு!

Related Posts

தரங்கம்பாடி அருகே வீட்டில் தீ விபத்து – திமுக,அதிமுக மற்றும் அரசு சார்பில் நிவாரண உதவி
News

தரங்கம்பாடி அருகே வீட்டில் தீ விபத்து – திமுக,அதிமுக மற்றும் அரசு சார்பில் நிவாரண உதவி

December 28, 2025
மக்கள் பட்டா கேட்டு போராடுகிற கேவலமான நிலைக்கு முதலமைச்சர் தள்ளக்கூடாது… ஆட்சி மாற்றம் வேண்டும்…”
News

மக்கள் பட்டா கேட்டு போராடுகிற கேவலமான நிலைக்கு முதலமைச்சர் தள்ளக்கூடாது… ஆட்சி மாற்றம் வேண்டும்…”

December 28, 2025
திமுகவை உசுப்பேத்துகிறார் திருமா-EPS காட்டம்
News

அதிமுக ஆட்சி அமைந்ததும் மத்திய அரசின் ஊரக வேலை உறுதி திட்டம் 150 நாட்களாகும் – EPS உறுதி

December 28, 2025
தவெக தலைவர் விஜய் கீழே விழுந்ததால் பரபரப்பு
News

தவெக தலைவர் விஜய் கீழே விழுந்ததால் பரபரப்பு

December 28, 2025
Next Post
தேசிய சீனியர் வாலிபால் போட்டி தமிழக அணிக்கு மதுரை வீராங்கனை ஜெயப்ரியா தேர்வு!

தேசிய சீனியர் வாலிபால் போட்டி தமிழக அணிக்கு மதுரை வீராங்கனை ஜெயப்ரியா தேர்வு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
தவெக தலைவர் விஜய் கீழே விழுந்ததால் பரபரப்பு

தவெக தலைவர் விஜய் கீழே விழுந்ததால் பரபரப்பு

December 28, 2025
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு குருபூஜை – திரண்டு வந்த பிரபலங்கள்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு குருபூஜை – திரண்டு வந்த பிரபலங்கள்

December 28, 2025
மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் – மோடி வேண்டுகோள்

தமிழ் மொழியை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி

December 28, 2025
திமுகவை உசுப்பேத்துகிறார் திருமா-EPS காட்டம்

அதிமுக ஆட்சி அமைந்ததும் மத்திய அரசின் ஊரக வேலை உறுதி திட்டம் 150 நாட்களாகும் – EPS உறுதி

December 28, 2025
தரங்கம்பாடி அருகே வீட்டில் தீ விபத்து – திமுக,அதிமுக மற்றும் அரசு சார்பில் நிவாரண உதவி

தரங்கம்பாடி அருகே வீட்டில் தீ விபத்து – திமுக,அதிமுக மற்றும் அரசு சார்பில் நிவாரண உதவி

0
திமுகவை உசுப்பேத்துகிறார் திருமா-EPS காட்டம்

அதிமுக ஆட்சி அமைந்ததும் மத்திய அரசின் ஊரக வேலை உறுதி திட்டம் 150 நாட்களாகும் – EPS உறுதி

0
மக்கள் பட்டா கேட்டு போராடுகிற கேவலமான நிலைக்கு முதலமைச்சர் தள்ளக்கூடாது… ஆட்சி மாற்றம் வேண்டும்…”

மக்கள் பட்டா கேட்டு போராடுகிற கேவலமான நிலைக்கு முதலமைச்சர் தள்ளக்கூடாது… ஆட்சி மாற்றம் வேண்டும்…”

0
தவெக தலைவர் விஜய் கீழே விழுந்ததால் பரபரப்பு

தவெக தலைவர் விஜய் கீழே விழுந்ததால் பரபரப்பு

0
தரங்கம்பாடி அருகே வீட்டில் தீ விபத்து – திமுக,அதிமுக மற்றும் அரசு சார்பில் நிவாரண உதவி

தரங்கம்பாடி அருகே வீட்டில் தீ விபத்து – திமுக,அதிமுக மற்றும் அரசு சார்பில் நிவாரண உதவி

December 28, 2025
மக்கள் பட்டா கேட்டு போராடுகிற கேவலமான நிலைக்கு முதலமைச்சர் தள்ளக்கூடாது… ஆட்சி மாற்றம் வேண்டும்…”

மக்கள் பட்டா கேட்டு போராடுகிற கேவலமான நிலைக்கு முதலமைச்சர் தள்ளக்கூடாது… ஆட்சி மாற்றம் வேண்டும்…”

December 28, 2025
திமுகவை உசுப்பேத்துகிறார் திருமா-EPS காட்டம்

அதிமுக ஆட்சி அமைந்ததும் மத்திய அரசின் ஊரக வேலை உறுதி திட்டம் 150 நாட்களாகும் – EPS உறுதி

December 28, 2025
தவெக தலைவர் விஜய் கீழே விழுந்ததால் பரபரப்பு

தவெக தலைவர் விஜய் கீழே விழுந்ததால் பரபரப்பு

December 28, 2025

Recent News

தரங்கம்பாடி அருகே வீட்டில் தீ விபத்து – திமுக,அதிமுக மற்றும் அரசு சார்பில் நிவாரண உதவி

தரங்கம்பாடி அருகே வீட்டில் தீ விபத்து – திமுக,அதிமுக மற்றும் அரசு சார்பில் நிவாரண உதவி

December 28, 2025
மக்கள் பட்டா கேட்டு போராடுகிற கேவலமான நிலைக்கு முதலமைச்சர் தள்ளக்கூடாது… ஆட்சி மாற்றம் வேண்டும்…”

மக்கள் பட்டா கேட்டு போராடுகிற கேவலமான நிலைக்கு முதலமைச்சர் தள்ளக்கூடாது… ஆட்சி மாற்றம் வேண்டும்…”

December 28, 2025
திமுகவை உசுப்பேத்துகிறார் திருமா-EPS காட்டம்

அதிமுக ஆட்சி அமைந்ததும் மத்திய அரசின் ஊரக வேலை உறுதி திட்டம் 150 நாட்களாகும் – EPS உறுதி

December 28, 2025
தவெக தலைவர் விஜய் கீழே விழுந்ததால் பரபரப்பு

தவெக தலைவர் விஜய் கீழே விழுந்ததால் பரபரப்பு

December 28, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.