10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார் விஜய் !

சென்னை : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து, விருது வழங்கி பாராட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், சட்டசபை தொகுதிவாரியாக மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு நினைவுச் சின்னங்கள், பரிசுகள் வழங்கப்பட்டு, விருந்தளிக்கப்பட்டது. விஜய் அவர்கள் தனிப்பட்ட முறையில் மாணவர்களை வாழ்த்தியதும், நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக இருந்தது.

முதற்கட்டமாக, மே 30ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில், 80 தொகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இன்று (ஜூன் 4) இரண்டாம் கட்டமாக, ராமநாதபுரம், ஈரோடு, கரூர், தஞ்சாவூர், தர்மபுரி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவாரூர், தென்காசி, மயிலாடுதுறை, விருதுநகர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களைச் சேர்ந்த மாணவர்களும் விருது பெற்றனர்.

இந்நிகழ்வுகள் சென்னை கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி அமைந்துள்ள விஜய்யின் வீடு மற்றும் கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வந்ததற்காக, பாதுகாப்பு காரணத்தால் கட்சி நடவடிக்கைகள் அனைத்தும் அங்கேயே நடத்தப்படுகின்றன என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

Exit mobile version