நம்ம தமிழ்நாட்ல இருக்க பெரும்பாலான டீக்கடைகள்ல வடை, போண்டா, பஜ்ஜி இதெல்லாம் newspaperல வெச்சி விற்பனை செய்யர்த நாம பார்த்திருபோம்….முக்கியமா பஜ்ஜில இருக்க என்னெய்ய எடுக்க அதை news paper அழுத்தி எடுத்த என்னெய் போன பிறகு நம்ம சாப்பிடுவோம்…ஆனா அப்படி சாப்பிடும்போது, எண்ணெயை நியூஸ் பேப்பர் உறிஞ்சிடும்ன்னு நம்ம நினைக்கிறோம்,ஆனா அப்படி செய்ய்ர்துனால, பல உடல்நலப் பிரச்சினைகள் வரும்ன்னு உங்களுக்கு தெரியுமா ?
செய்தித்தாள்களில் அச்சிடப் பயன்படுத்தப்படும் மையில் பல்வேறு நச்சுகள் இருக்கு.. இது உடம்புக்ள்ள போய் சிறுநீரகம், கல்லீரல், தசை வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி ஆகியவற்றில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தவும் செய்யும்…இது இல்லாம், அச்சு மையை உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் அபாயங்களும் அதிகரிக்கக்கூடும். அச்சிடப்பட்ட காகிதங்களில் இருக்கும் ரசாயனங்கள், செயற்கை நிறங்கள் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தவும் செய்யலாம். இதுனால, ஞாபகம் மறதி பிரச்சனைகளும்,உள் உறுப்புகளில் பிரச்சனையையும் வர வாய்ப்புகள் இருக்கு.
அப்படின்றதுனால், செய்தித்தாள்களை பயன்படுத்த வேண்டாம் என உணவு பாதுகப்பு துறை அறிக்கை வெளியிட்டு இருக்காங்க.. எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்களான பஜ்ஜி, வடை, போண்டா, முறுக்கு போன்ற தின்பண்டங்களை அச்சடிக்கப்பட்ட காகிதம், செய்தித்தாள்கள், பிளாஸ்டிக் பேப்பர்களில் கட்டிக் கொடுக்கக் கூடாது என உணவு பாதுகாப்புத்துறை திட்டவட்டம சொல்லி இருக்காங்க….