- இஸ்ரேல் – ஈரான் நாடுகள் குண்டுகளை வீசி பரஸ்பரமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இதுவரையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 600ஐ தாண்டியுள்ளது.
- ஆமதாபாத் விமான விபத்தின் நீட்சியாக 6 நாட்களில், போயிங் 787 – 8 டிரீம்லைனர் ரக விமான சேவை, 66 முறை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.
- ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ரூ.3 ஆயிரத்திற்கு கார்களுக்கு வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
- போர் தொடங்குகிறது. சமரசத்துக்கு வாய்ப்பில்லை என அமெரிக்கா, இஸ்ரேலுக்கு, ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பான விளக்கத்தை, இன்று (ஜூன் 19) தெரிவிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- பாகிஸ்தானுடான பிரச்னைகளில் அமெரிக்காவின் எந்த ஒரு மத்தியஸ்தத்தையும் இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்று அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
- தி.மு.க., உடன் பா.ம.க., இணைந்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம். நான் இடையூறாக இருக்க மாட்டேன் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
- த.வெ.க., தலைமையில் கூட்டணி அமைப்பது குறித்து, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வி.சி., மற்றும் ம.தி.மு.க.,விடம், திரைப்படத் தயாரிப்பாளர் தரப்பு பேச்சு நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.
- பொது இடங்களில் நடப்படும் கொடிக்கம்பங்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் பரிந்துரை வழங்கியுள்ளது.
- சென்னை:ஆந்திரம், கர்நாடகம் அளவுக்கு தமிழகத்தில் தொழிற்துறை வளர்ச்சியடையவில்லை என்று அமைச்சர் வாக்குமூலம் குறித்து முதல்வரின் பதில் என்ன? என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.