- தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்ததால், ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.83 ஆயிரத்தை தாண்டியது.
- ஜிஎஸ்டி வரி குறைப்பை தொடர்ந்து ஆவின் பால் பொருட்களின் விலைகளை குறைத்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
- அருணாச்சலப் பிரதேசம் கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசிடமிருந்து ரூ.1 லட்சம் கோடியைப் பெற்றுள்ளது. இது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பெற்றதை விட 16 மடங்கு அதிகம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
- கான்பூரில் இருந்து டில்லிக்கு இண்டிகோ நிறுவனத்தின் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் எலி நடமாடியதால் விமான பயணம் 3 மணி நேரம் தாமதம் ஆனது. இதனால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.
- நடிகர் விஜயின் பேச்சில் அகந்தை அதிகம் உள்ளது. முதல்வரை மிரட்டும் தொனியில் பேசுவதில் இருந்தே அவரை பாஜ தான் இயக்குகிறது என்பது தெரிகிறது என சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.
- கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள கிராமத்தின் மீது பாகிஸ்தான் விமானப்படை 8 வெடிகுண்டுகளை வீசியதில் அப்பாவி மக்கள் 30 பேர் உயிரிழந்தனர். இன்னும் பலர் காயமடைந்தனர்.
- திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் வேலையைச் செய்யவா தமிழக பள்ளிக் கல்வித் துறை? என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
- ஒன்றை புரிந்து, ஆராய்ந்து கற்க வேண்டுமெனில், தாய் மொழி கல்வியே அவசியம் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
- கோவையில் நடக்கும் கனிமவள கொள்ளைக்கு, காரணமானவர்களை கைது செய்து இயற்கையை சுரண்டும் அவலத்துக்கு, முடிவுரை எழுத வேண்டும் என்று, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
- உஜ்வாலா திட்டத்தின் கீழ், 25 லட்சம் புதிய இலவச காஸ் இணைப்புகள் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்து உள்ளார். அவர், ‘இது பெண்களுக்கான பரிசு. பெண்களை துர்க்கை போன்று பிரதமர் மதிப்பதற்கு சான்று’, என்றார்.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 22 SEP 2025 | Retro tamil
