October 16, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு…அடுத்த ஒரு மாதத்திற்கு செய்யப்பட்டுள்ள மாற்றம்?

by Divya
July 21, 2025
in Bakthi
A A
0
திருப்பதியில் ஜூலை 16-ம் தேதி ஆனிவார ஆஸ்தானம்
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக திருமலையில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அவ்வப்போது அப்டேட்களை வழங்கி வருகிறது. அதன் படி அடுத்த ஒரு மாதத்திற்கு செய்யப்பட்டுள்ள மாற்றம் குறித்த தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது வருடாந்திர உற்சவங்கள் நடைபெற துவங்கி விட்டன. இதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பதியில் தற்போது வார நாட்களில் 70,000 முதல் 80,000 வரையிலான பக்தர்களும், வார இறுதி நாட்களில் 90,000க்கும் அதிகமான பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜூலை 29ம் தேதி திருப்பதியில் கருட பஞ்சமியை முன்னிட்டு கருட சேவை நடைபெற உள்ளது. அன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை இந்த கருட சேவை உற்சவம் நடைபெற உள்ளது. ஏற்கனவே பெளர்ணமி கருட சேவை நிறைவடைந்து விட்ட நிலையில், தற்போது இரண்டாவது முறையாக இந்த மாதத்தில் கருட சேவை நடைபெற உள்ளது. கருட பஞ்சமி அன்று மலையப்ப சுவாமி, கருட வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

இந்த ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி துவங்கி, திருப்பதியில் சலகட்ல பிரம்மோற்சவம் எனப்படும் புரட்டாசி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகள் இப்போதே துவங்கப்பட்டு விட்டன. வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சுவாமி புஷ்கரணியில் புனரமைப்பு பணிகள் ஜூலை 20ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 19ம் தேதி வரை நடைபெற உள்ளன. வழக்கமாக சலகட்ல பிரம்மோற்சவத்தின் போது புஷ்கரணியில் புனரமைப்பு பணிகள் நடத்தப்படும். பிரம்மோற்சவம் துவங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே புனரமைப்பு பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என அதிகாரிகள் கருதுவதால் இந்த ஆண்டு புனரமைப்பு பணிகள் முன் கூட்டியே துவங்கப்பட்டு விட்டன.

புனரமைப்பு பணிகள் நடைபெறும் இந்த ஒரு மாத காலமும் புஷ்கரணி ஆரத்தி நடைபெறாது. அதே போல் பக்தர்களும் ஜூலை 20 துவங்கி, ஆகஸ்ட் 19ம் வரை புஷ்கரணியில் நீராட அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதனால் திருப்பதி செல்லும் பக்தர்கள் இதை மனதில் வைத்துக் கொண்டு பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் சமயத்தில் புஷ்கரணி மூடப்படுவது பக்தர்களுக்க ஏமாற்றத்தை அளித்துள்ளது. திருப்பதியில் ஜூலை 17ம் தேதி 63,897 பேர் சாமி தரிசனம் செய்த நிலையில் ஜூலை 18ம் தேதி 73,093 பேரும், ஜூலை 19ம் தேதி 90,011 பேரும் சாமி தரிசனம் செய்துள்ளனர். திருப்பதியில் சராசரியாக சர்வ தரிசனத்திற்கு 12 முதல் 14 மணி நேரம் ஆகிறது. நாராயண கிரி ஷெட் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

திருப்பதி செல்லும் பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராட வேண்டும் என்றால் அதற்கு இன்னும் ஒரு மாத காலம் காத்திருக்க வேண்டும். அதனால் திருப்பதி செல்லும் பக்தர்கள் இந்த மாற்றங்களை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

Tags: brahmotsavamperumalpuratasi monthTirupati
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

உத்தரப்பிரதேசத்தில் 15 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு பலி

Next Post

அரசு நடவடிக்கையைக் கேள்வி எழுப்பும் அண்ணாமலை

Related Posts

சுக்ரீஸ்வரர் திருக்கோயில்
Bakthi

சுக்ரீஸ்வரர் திருக்கோயில்

October 15, 2025
அருள்மிகு பரசுராமேஸ்வரசுவாமி திருக்கோயில்
Bakthi

அருள்மிகு பரசுராமேஸ்வரசுவாமி திருக்கோயில்

October 15, 2025
மணிகண்டீஸ்வரர் திருக்கோயில்
Bakthi

மணிகண்டீஸ்வரர் திருக்கோயில்

October 14, 2025
இருதயாலீஸ்வரர் திருக்கோயில்
Bakthi

இருதயாலீஸ்வரர் திருக்கோயில்

October 14, 2025
Next Post
அரசு நடவடிக்கையைக் கேள்வி எழுப்பும் அண்ணாமலை

அரசு நடவடிக்கையைக் கேள்வி எழுப்பும் அண்ணாமலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது” – தவெக நிர்வாகி ஜாமீன் மனுவில் நீதிபதி கடுமையான கருத்து

“பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது” – தவெக நிர்வாகி ஜாமீன் மனுவில் நீதிபதி கடுமையான கருத்து

October 15, 2025
முறுக்கு முறுக்கு..தீபாவளிக்கு பலவகை முறுக்குகள் தயார்

முறுக்கு முறுக்கு..தீபாவளிக்கு பலவகை முறுக்குகள் தயார்

October 15, 2025
சட்டசபையில் கருப்பு பட்டையுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் !

சட்டசபையில் கருப்பு பட்டையுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் !

October 15, 2025
திருப்பூர் ரிதன்யா வழக்கில் புதிய திருப்பம் – 3 சிம் கார்டு, 2 செல்போன்களில் புதிய ஆடியோ ஆதாரம் !

திருப்பூர் ரிதன்யா வழக்கில் புதிய திருப்பம் – 3 சிம் கார்டு, 2 செல்போன்களில் புதிய ஆடியோ ஆதாரம் !

October 15, 2025
பாகிஸ்தான் தலிபான் மோதல் – 40 தலிபான்கள் கொல்லப்பட்டதாக தகவல்

பாகிஸ்தான் தலிபான் மோதல் – 40 தலிபான்கள் கொல்லப்பட்டதாக தகவல்

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 16 Octo 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 16 Octo 2025 | Retro tamil

0
முறுக்கு முறுக்கு..தீபாவளிக்கு பலவகை முறுக்குகள் தயார்

முறுக்கு முறுக்கு..தீபாவளிக்கு பலவகை முறுக்குகள் தயார்

0
ஆளுநர் ரவியின் நடவடிக்கை அரசியல் சட்டத்துக்கு முரணா ? – புது வழக்கு.. உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு

ஆளுநர் ரவியின் நடவடிக்கை அரசியல் சட்டத்துக்கு முரணா ? – புது வழக்கு.. உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு

0
பாகிஸ்தான் தலிபான் மோதல் – 40 தலிபான்கள் கொல்லப்பட்டதாக தகவல்

பாகிஸ்தான் தலிபான் மோதல் – 40 தலிபான்கள் கொல்லப்பட்டதாக தகவல்

October 16, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 16 Octo 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 16 Octo 2025 | Retro tamil

October 16, 2025
முறுக்கு முறுக்கு..தீபாவளிக்கு பலவகை முறுக்குகள் தயார்

முறுக்கு முறுக்கு..தீபாவளிக்கு பலவகை முறுக்குகள் தயார்

October 15, 2025
ஆளுநர் ரவியின் நடவடிக்கை அரசியல் சட்டத்துக்கு முரணா ? – புது வழக்கு.. உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு

ஆளுநர் ரவியின் நடவடிக்கை அரசியல் சட்டத்துக்கு முரணா ? – புது வழக்கு.. உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு

October 15, 2025
Loading poll ...
Coming Soon
பைசன் படத்தின் ட்ரெய்லர் பற்றி உங்கள் கருத்து ?

Recent News

பாகிஸ்தான் தலிபான் மோதல் – 40 தலிபான்கள் கொல்லப்பட்டதாக தகவல்

பாகிஸ்தான் தலிபான் மோதல் – 40 தலிபான்கள் கொல்லப்பட்டதாக தகவல்

October 16, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 16 Octo 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 16 Octo 2025 | Retro tamil

October 16, 2025
முறுக்கு முறுக்கு..தீபாவளிக்கு பலவகை முறுக்குகள் தயார்

முறுக்கு முறுக்கு..தீபாவளிக்கு பலவகை முறுக்குகள் தயார்

October 15, 2025
ஆளுநர் ரவியின் நடவடிக்கை அரசியல் சட்டத்துக்கு முரணா ? – புது வழக்கு.. உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு

ஆளுநர் ரவியின் நடவடிக்கை அரசியல் சட்டத்துக்கு முரணா ? – புது வழக்கு.. உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு

October 15, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.