March 25, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருச்செங்கோட்டில் மேடையில் அரசியல் பேசிய தவெக கொள்கை பரப்புச் செயலாளருக்கு கடும் எதிர்ப்பு

by sowmiarajan
January 18, 2026
in News
A A
0
திருச்செங்கோட்டில் மேடையில் அரசியல் பேசிய தவெக கொள்கை பரப்புச் செயலாளருக்கு கடும் எதிர்ப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு விழா ஒன்றில், தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் அரசியல் குறித்துப் பேசியதற்கு விழாக்குழுவினர் மேடையிலேயே கடும் எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செங்கோடு 11-வது வார்டு சின்னப்பாவடி பகுதியில், ‘சின்னப்பாவடி டெக்கரேஷன் கிளப்’ மற்றும் ‘அங்கு மெமோரியல் கிரிக்கெட் கிளப்’ ஆகியவை இணைந்து நடத்திய பொங்கல் திருவிழா மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்க முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரியும், தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளருமான அருண்ராஜ் அழைக்கப்பட்டிருந்தார்.

பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற அருண்ராஜ், மேடையில் பேசத் தொடங்கியபோது தனது கட்சித் தலைவர் விஜய் குறித்தும், அவரை வருங்கால முதலமைச்சர் எனக் குறிப்பிட்டும் பேசினார். மேலும், பொதுமக்களிடம் “உங்களுக்கு விஜய்யை எவ்வளவு பிடிக்கும்?” என்று கேட்டதுடன், அரசு மருத்துவமனைகளின் தரம் மற்றும் அங்குள்ள கழிப்பிட வசதிகள் குறித்த அரசியல் ரீதியான கேள்விகளை எழுப்பினார். ஒரு விளையாட்டு மற்றும் கலாச்சார விழாவில் அரசியல் உள்நோக்கத்துடன் கேள்விகள் கேட்கப்பட்டதால் விழா மேடையில் சலசலப்பு ஏற்பட்டது.

அப்போது குறுக்கிட்ட விழாக்குழு நிர்வாகி தனசேகர் என்பவர், அருண்ராஜின் பேச்சை இடையில் நிறுத்தி பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்தார். “இது ஒரு பொதுவான பொங்கல் விழா, இங்கு அரசியலைப் பற்றிப் பேச வேண்டாம். பொங்கல் குறித்து மட்டும் பேசுங்கள்; உங்கள் அரசியல் கருத்துகளைப் பேச வேண்டுமானால் தனியாக மேடை போட்டுப் பேசிக் கொள்ளுங்கள். இந்த நிகழ்ச்சிக்கு நான்தான் தலைவர், இங்கு உங்கள் கட்சி அரசியலை அனுமதிக்க முடியாது” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். விழாக்குழுவினரின் இந்த அதிரடி எதிர்ப்பால் அதிர்ச்சியடைந்த அருண்ராஜ், தனது பேச்சை பாதியிலேயே நிறுத்திக் கொண்டார். பின்னர், “வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்” என்று மட்டும் கூறிவிட்டு உடனடியாக மேடையை விட்டு இறங்கிச் சென்றார்.

2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் அருண்ராஜ் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவர் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். இத்தகைய சூழலில், பொது மேடையில் அரசியல் பேசக்கூடாது என விழாக்குழுவினர் தடுத்த சம்பவம் திருச்செங்கோடு பகுதியில் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விழாக்களின் தன்மையைப் புரிந்து கொள்ளாமல் அரசியல் பேசுவது முறையாகாது என ஒரு தரப்பினரும், மக்கள் குறைகளைத்தானே கேட்டார் என மற்றொரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Tags: dhinakaranfactionpolitics propagandasecretaryttv
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பொங்கல் விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்கு அதிர்ச்சி: மதுரை – சென்னை ஆம்னி பேருந்து கட்டணம் ரூ.6000-ஆக உயர்வு

Next Post

மக்கள்திரள் வரவேற்புக்கு இடையே பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

Related Posts

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 
News

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

March 24, 2026
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்
News

சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

March 24, 2026
விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்
News

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

March 24, 2026
முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை
News

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

March 24, 2026
Next Post
மக்கள்திரள் வரவேற்புக்கு இடையே பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மக்கள்திரள் வரவேற்புக்கு இடையே பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

March 24, 2026
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

March 24, 2026
விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

March 24, 2026
முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

March 24, 2026
மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

0
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

0
விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

0
முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

0
மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

March 24, 2026
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

March 24, 2026
விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

March 24, 2026
முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

March 24, 2026

Recent News

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

March 24, 2026
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

March 24, 2026
விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

March 24, 2026
முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

March 24, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.