March 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திண்டுக்கல் கல்வி அலுவலகத்தில் ஏழு ஆண்டுகளாக முடங்கிக்கிடக்கும் ‘நடமாடும் ஆய்வகம்’: பயன்பாட்டிற்கு வருமா?

by sowmiarajan
January 2, 2026
in News
A A
0
திண்டுக்கல் கல்வி அலுவலகத்தில் ஏழு ஆண்டுகளாக முடங்கிக்கிடக்கும் ‘நடமாடும் ஆய்வகம்’: பயன்பாட்டிற்கு வருமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கப்பட்ட நடமாடும் அறிவியல் ஆய்வக வாகனம், கடந்த ஏழு ஆண்டுகளாக எவ்வித பயன்பாடும் இன்றி நூலாம்படை படர்ந்து பாழடைந்து வருவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு தொடக்கக் கல்வி இயக்குனரகம் சார்பில், கிராமப்புற மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பக் கல்வியை கொண்டு சேர்க்கும் உன்னத நோக்கில் தமிழகம் முழுவதும் 15 சிறப்பு வாகனங்கள் வழங்கப்பட்டன. அதில் ஒரு வாகனத்தைப் பெற்ற திண்டுக்கல் மாவட்டம், தொடக்கத்தில் அதனைச் சிறப்பாகப் பயன்படுத்திய போதிலும், கடந்த ஏழு ஆண்டுகளாக அந்த வாகனம் அலுவலகத்தின் ஒரு மூலையில் கேட்பாரற்ற நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நவீன வாகனத்தில் தொலைக்காட்சிப் பெட்டி, புரோஜெக்டர், உயர்தர ஒலிபெருக்கிகள் மற்றும் அறிவியலை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் செய்முறை மாதிரி உபகரணங்கள் என ஒரு நடமாடும் வகுப்பறைக்கே உண்டான அனைத்து வசதிகளும் உள்ளன. குறிப்பாக, குக்கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் அறிவியல் சோதனைகளை நேரடியாகச் செய்து பார்க்கவும், கல்வி சார்ந்த காணொளிகளைக் கண்டு களிக்கவும் இந்த வாகனம் பேருதவியாக இருக்கும். ஆனால், பராமரிப்பு இன்மையால் தற்போது இந்த வாகனத்தின் இயந்திரம் பழுதடைந்து, டயர்கள் காற்று இறங்கி, துருப்பிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதையே காட்டுகிறது.

இந்த அலுவலக வளாகத்திற்கு தினந்தோறும் வந்து செல்லும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் தொடக்கக் கல்வி அலுவலர் என உயர்மட்ட அதிகாரிகள் பலரும் இந்த அவலநிலையைக் கண்டும் காணாமல் இருப்பது வேதனைக்குரியது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், தரமான கல்வியை வழங்கவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், கையில் இருக்கும் ஒரு நவீன வாகனத்தை முறையாகப் பயன்படுத்தாமல் இருப்பது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. எனவே, மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் உஷா ஆகியோர் உடனடியாகத் தலையிட்டு, இந்த வாகனத்தை பழுதுபார்த்து, மீண்டும் கிராமப்புற மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கல்வி ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags: educationinitiative dindigullaboratorymobile
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தென்னம்பட்டி சவடம்மன் மலைக்கோயிலில் 108 சங்காபிஷேகம் அரசு – வேம்பு மரங்களுக்கு திருக்கல்யாணம்!

Next Post

வேடசந்தூர் அருகே கிணற்றில் நீர்மட்டத்தை எட்டிப்பார்த்த நிதி நிறுவன அதிபர் தவறி விழுந்து பலி!

Related Posts

விக்கிரவாண்டி கக்கன் காலனியில் 1.50 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு சமுதாய கூடத்தை காணொளி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்
News

விழுப்புரத்தில்  உற்சாகமாக கொண்டாடிய ஹோலி பண்டிகை

March 5, 2026
விக்கிரவாண்டி கக்கன் காலனியில் 1.50 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு சமுதாய கூடத்தை காணொளி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்
News

விக்கிரவாண்டி கக்கன் காலனியில் 1.50 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு சமுதாய கூடத்தை காணொளி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்

March 5, 2026
திருவாரூரில் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  திடீர் சாலை மறியல்
News

திருவாரூரில் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  திடீர் சாலை மறியல்

March 5, 2026
திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்
News

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்

March 5, 2026
Next Post
வேடசந்தூர் அருகே கிணற்றில் நீர்மட்டத்தை எட்டிப்பார்த்த நிதி நிறுவன அதிபர் தவறி விழுந்து பலி!

வேடசந்தூர் அருகே கிணற்றில் நீர்மட்டத்தை எட்டிப்பார்த்த நிதி நிறுவன அதிபர் தவறி விழுந்து பலி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

March 4, 2026
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

March 4, 2026
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

March 3, 2026
விக்கிரவாண்டி கக்கன் காலனியில் 1.50 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு சமுதாய கூடத்தை காணொளி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்

விழுப்புரத்தில்  உற்சாகமாக கொண்டாடிய ஹோலி பண்டிகை

0
விக்கிரவாண்டி கக்கன் காலனியில் 1.50 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு சமுதாய கூடத்தை காணொளி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்

விக்கிரவாண்டி கக்கன் காலனியில் 1.50 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு சமுதாய கூடத்தை காணொளி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்

0
திருவாரூரில் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  திடீர் சாலை மறியல்

திருவாரூரில் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  திடீர் சாலை மறியல்

0
திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்

0
விக்கிரவாண்டி கக்கன் காலனியில் 1.50 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு சமுதாய கூடத்தை காணொளி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்

விழுப்புரத்தில்  உற்சாகமாக கொண்டாடிய ஹோலி பண்டிகை

March 5, 2026
விக்கிரவாண்டி கக்கன் காலனியில் 1.50 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு சமுதாய கூடத்தை காணொளி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்

விக்கிரவாண்டி கக்கன் காலனியில் 1.50 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு சமுதாய கூடத்தை காணொளி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்

March 5, 2026
திருவாரூரில் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  திடீர் சாலை மறியல்

திருவாரூரில் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  திடீர் சாலை மறியல்

March 5, 2026
திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்

March 5, 2026

Recent News

விக்கிரவாண்டி கக்கன் காலனியில் 1.50 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு சமுதாய கூடத்தை காணொளி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்

விழுப்புரத்தில்  உற்சாகமாக கொண்டாடிய ஹோலி பண்டிகை

March 5, 2026
விக்கிரவாண்டி கக்கன் காலனியில் 1.50 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு சமுதாய கூடத்தை காணொளி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்

விக்கிரவாண்டி கக்கன் காலனியில் 1.50 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு சமுதாய கூடத்தை காணொளி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்

March 5, 2026
திருவாரூரில் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  திடீர் சாலை மறியல்

திருவாரூரில் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  திடீர் சாலை மறியல்

March 5, 2026
திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்

March 5, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.