March 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“திமுக ஒரு தீயசக்தி; தவெக ஒரு தூயசக்தி” – ஈரோட்டில் அனல் பறக்கப் பேசிய விஜய்!

by sowmiarajan
December 18, 2025
in News
A A
0
“திமுக ஒரு தீயசக்தி; தவெக ஒரு தூயசக்தி” – ஈரோட்டில் அனல் பறக்கப் பேசிய விஜய்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே இன்று (டிசம்பர் 18) நடைபெற்ற ‘மக்கள் சந்திப்பு’ பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது ஆளும் திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடிய அவர், “திமுக ஒரு தீயசக்தி, தவெக ஒரு தூயசக்தி” என்று கூறி தேர்தல் களத்தை அதிரவைத்துள்ளார்.

கூட்டத்தில் உரையாற்றத் தொடங்கிய விஜய், ஈரோட்டின் அடையாளமான மஞ்சளைப் பற்றி உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். “மஞ்சள் என்றாலே ஒரு தனி ‘வைப்’ தான். மங்களகரமான காரியங்களை மஞ்சளில் தொடங்குவது நம் பண்பாடு. நமது கட்சியின் கொடியிலும் அந்த ஆற்றல்மிக்க மஞ்சள் நிறம் இருக்கிறது. இந்த மஞ்சள் பூமியில் விவசாயத்திற்கு அரணாக விளங்கும் காலிங்கராயன் அணை மற்றும் கால்வாயை உருவாக்கிய காலிங்கராயரின் தியாகம் மகத்தானது. ஒரு மகனுக்கு அவனது தாய் கொடுக்கும் தைரியம் எதையும் சாதிக்க வைக்கும் என்பதற்கு காலிங்கராயன் வரலாறு சாட்சி. அந்தத் தாயின் தைரியத்தை இன்று என் மீது அன்பு வைத்துள்ள நீங்கள்தான் (மக்கள்) எனக்குக் கொடுக்கிறீர்கள்,” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தன்னைப் பற்றி பரப்பப்படும் அவதூறுகளுக்குப் பதிலடி கொடுத்த விஜய், “என்னை மக்களிடமிருந்து பிரிக்கச் சூழ்ச்சி செய்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாது, இந்த உறவு இன்று நேற்று வந்ததல்ல; நான் சினிமாவுக்கு வந்த 10 வயதிலிருந்து, கடந்த 33 ஆண்டுகளாகத் தொடரும் பந்தம் இது. நீங்கள் என்ன சூழ்ச்சி செய்தாலும் மக்கள் இந்த விஜய்யைக் கைவிட மாட்டார்கள்,” என முழங்கினார். மேலும், அண்ணாதுரை மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோர் தமிழகத்தின் சொத்து என்றும், அவர்களைப் பயன்படுத்துவதற்கு எவருக்கும் தனிப்பட்ட உரிமை கிடையாது என்றும் தெரிவித்தார்.

 ஆளும் திமுக அரசை ‘தீயசக்தி’ என விளித்துப் பேசிய விஜய், அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளைக் கடுமையாக விமர்சித்தார். “நீட் ரத்து, கல்விக் கடன் ரத்து எனப் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்தார்கள். எப்போதும் ஒன்றைச் சொல்வது, இன்னொன்றைச் செய்வதுதான் இவர்களின் வழக்கம். நான் பேசுவதைச் சினிமா டயலாக் என்கிறார்கள். நான் எத்தனை நிமிடம் பேசினால் உங்களுக்கு என்ன? வாயில் வடை சுடுவதற்கு நாங்கள் திமுக அல்ல; தவெக” என்று சாடினார். மக்கள் நலத் திட்டங்களை ‘ஓசி’ என்று கூறி இழிவுபடுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் அண்மையில் “என் கேரக்டரை புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க” எனப் பேசியதைக் குறிப்பிட்டுப் பேசிய விஜய், “சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் பாதுகாப்பு இல்லாமை, பொய் வாக்குறுதி – இதில் எங்கே உங்கள் கேரக்டரை புரிந்துகொள்வது? என்னுடைய கேரக்டர் என்பது மக்களின் கேரக்டர். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் கேரக்டரே வேறாக இருக்கும். அதை நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டால் மக்கள் புரியவைப்பார்கள்” என சவால் விடுத்தார்.

“உங்களுக்கு நீங்கள் கொள்ளையடித்த பணம் துணை; எனக்கு என் மீது அன்பு வைத்துள்ள இந்த ‘மாஸ்’ (மக்கள்) தான் துணை. தீயசக்தியான திமுகவை வீழ்த்த மக்களாகிய உங்களால் மட்டுமே முடியும். வெற்றி நிச்சயம்” எனக்கூறி தனது உரையை நிறைவு செய்தார். கூட்டத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் விஜய்யின் பேச்சை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

Tags: Erode rallyopposition attackpolitical confrontationTVK public meetingVijay speech highlights
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருப்பூர் குப்பை கிடங்கு விவகாரம்: அண்ணாமலை கைது

Next Post

தேர்தலில் போட்டியிடத் தயாராகிறாரா நீதிபதி?” – விகாஸ் சிங் கருத்தால் நீதிமன்றத்தில் பரபரப்பு!

Related Posts

சிவகாசி கண்மாயில் வினோத “நட்சத்திர ஆமை” மீட்பு: இளைஞர்களின் துரித செயலால் வனத்துறையிடம் ஒப்படைப்பு – கண்மாயில் அதிரடி ஆய்வு நடத்தத் திட்டம்!
News

சிவகாசி கண்மாயில் வினோத “நட்சத்திர ஆமை” மீட்பு: இளைஞர்களின் துரித செயலால் வனத்துறையிடம் ஒப்படைப்பு – கண்மாயில் அதிரடி ஆய்வு நடத்தத் திட்டம்!

March 4, 2026
வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!
News

வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

March 4, 2026
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!
News

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

March 4, 2026
ஆலங்குடி அருகே மாரியம்மன் கோவில் மாசி திருவிழா ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த 720 காளைகள் – மல்லுக்கட்டிய 320 காளையர்கள்!
News

ஆலங்குடி அருகே மாரியம்மன் கோவில் மாசி திருவிழா ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த 720 காளைகள் – மல்லுக்கட்டிய 320 காளையர்கள்!

March 4, 2026
Next Post
தேர்தலில் போட்டியிடத் தயாராகிறாரா நீதிபதி?” – விகாஸ் சிங் கருத்தால் நீதிமன்றத்தில் பரபரப்பு!

தேர்தலில் போட்டியிடத் தயாராகிறாரா நீதிபதி?" - விகாஸ் சிங் கருத்தால் நீதிமன்றத்தில் பரபரப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

March 3, 2026
திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

March 3, 2026
விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

March 3, 2026
சிவகாசி கண்மாயில் வினோத “நட்சத்திர ஆமை” மீட்பு: இளைஞர்களின் துரித செயலால் வனத்துறையிடம் ஒப்படைப்பு – கண்மாயில் அதிரடி ஆய்வு நடத்தத் திட்டம்!

சிவகாசி கண்மாயில் வினோத “நட்சத்திர ஆமை” மீட்பு: இளைஞர்களின் துரித செயலால் வனத்துறையிடம் ஒப்படைப்பு – கண்மாயில் அதிரடி ஆய்வு நடத்தத் திட்டம்!

0
வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

0
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

0
ஆலங்குடி அருகே மாரியம்மன் கோவில் மாசி திருவிழா ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த 720 காளைகள் – மல்லுக்கட்டிய 320 காளையர்கள்!

ஆலங்குடி அருகே மாரியம்மன் கோவில் மாசி திருவிழா ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த 720 காளைகள் – மல்லுக்கட்டிய 320 காளையர்கள்!

0
சிவகாசி கண்மாயில் வினோத “நட்சத்திர ஆமை” மீட்பு: இளைஞர்களின் துரித செயலால் வனத்துறையிடம் ஒப்படைப்பு – கண்மாயில் அதிரடி ஆய்வு நடத்தத் திட்டம்!

சிவகாசி கண்மாயில் வினோத “நட்சத்திர ஆமை” மீட்பு: இளைஞர்களின் துரித செயலால் வனத்துறையிடம் ஒப்படைப்பு – கண்மாயில் அதிரடி ஆய்வு நடத்தத் திட்டம்!

March 4, 2026
வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

March 4, 2026
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

March 4, 2026
ஆலங்குடி அருகே மாரியம்மன் கோவில் மாசி திருவிழா ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த 720 காளைகள் – மல்லுக்கட்டிய 320 காளையர்கள்!

ஆலங்குடி அருகே மாரியம்மன் கோவில் மாசி திருவிழா ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த 720 காளைகள் – மல்லுக்கட்டிய 320 காளையர்கள்!

March 4, 2026

Recent News

சிவகாசி கண்மாயில் வினோத “நட்சத்திர ஆமை” மீட்பு: இளைஞர்களின் துரித செயலால் வனத்துறையிடம் ஒப்படைப்பு – கண்மாயில் அதிரடி ஆய்வு நடத்தத் திட்டம்!

சிவகாசி கண்மாயில் வினோத “நட்சத்திர ஆமை” மீட்பு: இளைஞர்களின் துரித செயலால் வனத்துறையிடம் ஒப்படைப்பு – கண்மாயில் அதிரடி ஆய்வு நடத்தத் திட்டம்!

March 4, 2026
வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

March 4, 2026
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

March 4, 2026
ஆலங்குடி அருகே மாரியம்மன் கோவில் மாசி திருவிழா ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த 720 காளைகள் – மல்லுக்கட்டிய 320 காளையர்கள்!

ஆலங்குடி அருகே மாரியம்மன் கோவில் மாசி திருவிழா ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த 720 காளைகள் – மல்லுக்கட்டிய 320 காளையர்கள்!

March 4, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.