உலகப்புகழ் பெற்ற ஆன்மீகத் தலமான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று மாலை பக்திப் பரவசத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பழனியில் குவிந்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று மாலை 4 மணி அளவில், வண்ண மலர்களாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட திருத்தேரில் முருகப்பெருமான், வள்ளி – தெய்வானை சமேதராக சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் “அரோகரா.. அரோகரா..” என முழக்கமிட்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். இந்தத் திருத்தேர் பழனியின் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்த போது, பக்தர்களின் பக்தி முழக்கம் விண்ணைத் தொட்டது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார், கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் அறங்காவலர் குழு தலைவர் கே.எம். சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறங்காவலர்கள் தனசேகர், பாலசுப்பிரமணி, பாலசுப்பிரமணியம், அன்னபூரணி மற்றும் பழனி ஸ்ரீ கந்த விலாஸ் உரிமையாளர்கள் என்.செல்வகுமார், எஸ்.நவீன் விஷ்ணு, எஸ்.நரேஷ்குமரன், சரவணப் பொய்கை கந்த விலாஸ் என்.பாஸ்கரன், கண்பத் கிரேண்ட் அதிபர் ஹரிஹரமுத்து ஆகியோர் பங்கேற்று விழாவினைச் சிறப்பித்தனர். அரசியல் பிரமுகர்களான திமுக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அஸ்வின் பிரபாகரன், இளைஞர் அணி லோகநாதன், காணியாளர் நரேந்திரன், முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால், அதிமுக நகர செயலாளர் முருகானந்தம், ஒன்றிய செயலாளர்கள் முத்துச்சாமி, ஆர்எம்டிசி மாரியப்பன் மற்றும் வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் ஜே.பி.சரவணன், பில்டிங் காண்ட்ராக்டர் நேரு, அரிமா ஆ.சுந்தரம், சாய் கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ், பாரதிய ஜனதா கட்சி வழக்கறிஞர் திருமலைசாமி, சுவாமி விலாஸ் விபூதி ஸ்டோர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் இந்தத் தேரோட்ட வைபவத்தில் திமுக கவுன்சிலர் காளீஸ்வரி பாஸ்கரன், ஜவகர் ரெசிடென்சி உரிமையாளர் ஜே.மனோகரன், ஆனந்த விலாஸ் விபூதி ஸ்டோர் என்.முனியாண்டி, முருகன் சா மில் காளிங்கராயன், கவுன்சிலர்கள் சுரேஷ், பத்மினி முருகானந்தம், இந்திரா திருநாவுக்கரசு, மகேஸ்வரி சக்திவேல், முன்னாள் கவுன்சிலர் விஏபி குமார், எம்.முருகானந்தம் ஆகியோர் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரமுகர்கள் முத்து விஜயன், எஸ். சுந்தர், ராமநாத கிருஷ்ணன், வீரமணி, சாயிராபானு, முகமது அலி, குப்புசாமி ஆகியோரும், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பழனி பாலன், மாவட்ட இணை செயலாளர் சிவா, நகர செயலாளர் மிதுன் மனோகரன், துணைச் செயலாளர் லட்சுமி காந்த், மாவட்ட அமைப்பாளர் பிரவீன் என்ற குமார் உட்பட திரளான நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். விழாவிற்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளைக் கோவில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து செய்திருந்தது.
















