WTC Final : ஆஸ்திரேலியாவை 212 ரன்னுக்கு சுருட்டிய தென்னாப்பிரிக்கா – ரபாடா பஞ்சு போல பந்து வீசி கலக்கியது !

லண்டன் : 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்கா அணி, விக்கெட் வேட்டையில் சூறாவளி கிளப்பி போட்டியை கையாளும் நிலைக்குச் சென்றுள்ளது. ரபாடா தலைமையிலான பவுலிங் படை ஆஸ்திரேலியாவை வெறும் 212 ரன்களில்  நாக் அவுட் செய்தது.

ரபாடாவின் இரைச்சல் : தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பந்துவீச்சுக்கு ஏற்ற சூழ்நிலையில் பவுலர்கள் ரபாடா மற்றும் யான்ஸன் இருவரும் அதிரடியாக பந்து வீசியனர். தொடக்க வீரர் உஸ்மான் காவாஜா, காமிரான் கிரீன், டிராவிஸ் ஹெட், லபுசனே ஆகியோர் ரன்கள் சேர்க்காமல் வெளியேறினர்.

மீட்டெடுப்பை முயன்ற ஸ்டீவன் ஸ்மித் – வெப்ஸ்டர் ஜோடி சிறப்பாக ஆட்டத்தை கட்டுப்படுத்தினர். ஆனால், எய்டன் மார்க்ரமின் பந்துவீச்சில் ஸ்மித் (66) பெவிலியனை கண்டார். பின்னர், வெப்ஸ்டரையும் (72) ரபாடா வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் மீதம் இருந்த எதிர்பார்ப்பையும் நொறுக்கினார்.

ரபாடாவின் மைல்கற்கள் :

WTC Final-இல் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது பவுலராக நியூசிலாந்தின் கைல் ஜேமிசன் உடன் சேர்ந்தார்.

2015-க்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் 17 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்.

லார்ட்ஸ் மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் (18) வீழ்த்திய தென்னாப்பிரிக்க பவுலராக மோர்னே மோர்கலை (15) மிஞ்சினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 332 விக்கெட்டுகளுடன், ஆலன் டொனால்ட்டை (330) மிஞ்சி தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது மிக அதிக விக்கெட் எடுத்த பவுலராக உயர்ந்தார். முதலிடத்தில் டேல் ஸ்டெய்ன் (439) இருக்கிறார்.

ஆஸ்திரேலியா பதிலடி : தென்னாப்பிரிக்காவின் பேட்டிங் இன்னிங்சில் ஆஸ்திரேலிய பவுலர்களும் கணிசமான பதிலடி கொடுத்தனர். 25 ரன்னுக்கே 3 முக்கிய விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதால், போட்டி மிகுந்த பரபரப்பாகவே நீடிக்கிறது.

Exit mobile version