புதுடெல்லி : காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை தற்போது நிலையாகவும், சிறிது சிறிதாக மேம்படும் நிலையில் இருப்பதாகவும் சர் கங்காராம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
78 வயதான சோனியா காந்தி கடந்த ஜூன் 15ம் தேதி, உணவு ஒவ்வாமை, செரிமானக் கோளாறு மற்றும் வயிற்று பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட நிலையில் சர் கங்காராம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மருத்துமனை சேர்மன் டாக்டர் அஜய் ஸ்வரூப் அளித்த தகவலின்படி, “சோனியாவின் உடல்நிலை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இன்று புதிய உணவுத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவக் குழு அவரை மிக கவனமாக கண்காணித்து வருகிறது,” என்றார்.
எனினும், சோனியா காந்திக்கு டிஸ்சார்ஜ் அளிக்கப்படும் தேதி குறித்து இன்னும் இறுதியான முடிவு எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.