March 29, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கொடைக்கானலில் அதிர்ச்சி: பள்ளி வளாகத்திற்குள் பெண்ணைக் கடித்துக் குதறிய 8 தெருநாய்கள் – பாதுகாப்பு குறித்துப் பெற்றோர் அச்சம்!

by sowmiarajan
December 19, 2025
in News
A A
0
கொடைக்கானலில் அதிர்ச்சி: பள்ளி வளாகத்திற்குள் பெண்ணைக் கடித்துக் குதறிய 8 தெருநாய்கள் – பாதுகாப்பு குறித்துப் பெற்றோர் அச்சம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

கொடைக்கானல் எம்.எம்.தெரு பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், தனது மகளை அழைக்கச் சென்ற தாயை 8-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி வளைத்துக் கடித்துக் குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் புஸ்பராஜ். இவரது மனைவி லீமா ரோஸ்லின். இவர்களது மகன் மற்றும் மகள் எம்.எம்.தெரு அருகே உள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர். நேற்று மாலை, 9-ம் வகுப்பு பயிலும் தனது மகளுக்குச் சிறப்பு வகுப்பு முடிந்ததும், அவரை அழைத்துச் செல்வதற்காக லீமா ரோஸ்லின் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்றுள்ளார்.

பள்ளி வளாகத்திற்குள் தனது மகளுக்காகக் காத்திருந்தபோது, அங்கிருந்த 8-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் திடீரென லீமா ரோஸ்லினைச் சூழ்ந்து கொண்டுத் தாக்கத் தொடங்கின. அவர் தனது கையில் இருந்த ‘ஹெல்மெட்டை’ வைத்து நாய்களை விரட்ட முற்பட்டும், நாய்கள் அவரை விடாமல் கடித்துக் குதறின. இதில் அவரது கை, கால் மற்றும் உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த மற்ற பெற்றோர்கள் மற்றும் ஊழியர்கள் நாய்களை விரட்டி அவரை மீட்டனர். பலத்த காயமடைந்த லீமா ரோஸ்லின் தற்போது கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்துப் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில்: பள்ளி வளாகத்திற்குள் வெளிநபர்கள் மற்றும் விலங்குகள் நுழையாதவாறு முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லை. தெருநாய்கள் மட்டுமன்றி, அவ்வப்போது காட்டெருமைகளும் பள்ளி வளாகத்திற்குள் முகாமிடுவதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் உயிருக்கு அச்சம் நிலவுகிறது. இது குறித்துப் பள்ளி நிர்வாகம் போதிய கவனம் செலுத்தவில்லை எனக் குற்றம் சாட்டுகின்றனர். பள்ளி பயிலும் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவியரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நகராட்சி நிர்வாகம் தெருநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், பள்ளி நிர்வாகம் வளாகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.

Tags: attackdogs Animalincident Womankodaikanalstray
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பெரும்பாறை மலை கிராமங்களில் சட்டவிரோத ஆழ்துளை கிணறு பணிகள்

Next Post

கொடைக்கானல் சாலைகளில் உலவும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் – ஆணையாளர் எச்சரிக்கை!

Related Posts

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
News

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு
News

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்
News

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை
Bakthi

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026
Next Post
கொடைக்கானல் சாலைகளில் உலவும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் – ஆணையாளர் எச்சரிக்கை!

கொடைக்கானல் சாலைகளில் உலவும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் - ஆணையாளர் எச்சரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மேட்டுப்பாளையம் குமரபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்  மாவட்ட அறங்காவலர் தொடங்கி வைத்தார்!

மேட்டுப்பாளையம் குமரபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்  மாவட்ட அறங்காவலர் தொடங்கி வைத்தார்!

January 8, 2026
கண்கொடுத்தவனிதம் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 22000 சதுரஅடி இடத்தை காவல்துறை அதிரடியாக மீட்ட அறநிலையத்துறை

கண்கொடுத்தவனிதம் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 22000 சதுரஅடி இடத்தை காவல்துறை அதிரடியாக மீட்ட அறநிலையத்துறை

December 17, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 04, 2025 (வியாழக்கிழமை)

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 04, 2025 (வியாழக்கிழமை)

December 4, 2025
திருவாரூரில் மிக கனமழையால் -20க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் அவதி

திருவாரூரில் மிக கனமழையால் -20க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் அவதி

December 3, 2025
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

0
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

0
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

0
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

0
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026

Recent News

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.