டில்லியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : தேசிய மகளிர் ஆணையம் விசாரணை

புதுடில்லி: டில்லியின் வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள கல்வி நிறுவன இயக்குநரும் பிரபல சாமியாருமான சைதன்யானந்த சரஸ்வதி அலைஸ் பார்த்தசாரதி மீது, பல மாணவிகள் பாலியல் தொல்லை குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்படி, குறைந்தது 15 மாணவிகள் மீது அவர் பாலியல் தொந்தரவு செய்ததாகவும், ஆபாசமான வார்த்தைகளில் பேசியதோடு வாட்ஸ்அப், எஸ்எம்எஸ் மூலம் தவறான செய்திகளை அனுப்பியதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது அவர் தலைமறைவாக உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் (NCW) தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில், குற்றச்சாட்டுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க டெல்லி போலீசுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், மூன்று நாட்களுக்குள் எப்.ஐ.ஆர் நகலுடன் விரிவான முன்னேற்ற அறிக்கையையும் கோரியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், மகளிர் ஆணையம் கடுமையான கண்காணிப்பில் இருப்பதாக தெரிகிறது.

Exit mobile version