செங்கோட்டையன் பதவியில் இருந்து நீக்கம் ; ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக A.K. செல்வராஜ் நியமனம்

ஈரோடு: அதிமுக முன்னாள் அமைச்சர் K.A. செங்கோட்டையன், கட்சியில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் எனத் தெரிவித்த பின்னர், அவர் வகித்த அனைத்து பதவிகளிலும் இருந்து விடுவிக்கப்படுகிறார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதில், அவர் ஆதரவாளர்களாக இருந்த ஏழு பேர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக எம்.எல்.ஏ. A.K. செல்வராஜ் நியமிக்கப்பட்டு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி பணிகளை வகிக்க தொடங்கியுள்ளார்.

A.K. செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பதவி ஒருவரை நியமிக்கும் வரை, மாவட்டக் கழகப் பணிகளை மேற்கொள்ள நான் நியமிக்கப்பட்டுள்ளேன். கழக உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்புடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில், இதே போன்ற மாற்றங்கள் அதிமுகவில் வலுவான அமைப்புச் செயல்பாட்டை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Exit mobile version