January 25, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மரங்களுக்கு முத்தம் கொடுத்து மாநாட்டை அறிவித்தார் சீமான்!

by Divya
August 20, 2025
in News
A A
0
மரங்களுக்கு முத்தம் கொடுத்து மாநாட்டை அறிவித்தார் சீமான்!
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

திருத்தணியில் நடைபெறவுள்ள மரங்களின் மாநாட்டுக்கான இடத்தை பார்வையிட சென்ற போது, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மரங்களை கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.

சமீபகாலமாக நூதனமான போராட்டங்களை நடத்தி வரும் சீமான், பனையேறும் தொழிலாளர்களுக்காக பனைமரத்தில் ஏறி “கள் மீதான தடையை நீக்க வேண்டும்” எனக் கோரியும், மேய்ச்சல் நில ஆக்கிரமிப்பை எதிர்த்து மாடுகளை மேய்த்தும் ஆர்ப்பாட்டம் செய்திருந்தார்.

அதேபோல், வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் “மரங்களோடு பேசுவோம்; மரங்களுக்காகப் பேசுவோம்!” என்ற தலைப்பில் மரங்களின் மாநாட்டை நடத்த இருக்கிறார். இதற்கான இடத்தை அவர் இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது மரங்களை அணைத்து, முத்தமிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அவை வைரலாக பரவி வருகின்றன.trees

பின்னர் நிருபர்களை சந்தித்த சீமான் கூறியதாவது:
“மனிதர்கள் இல்லாமல் மரங்கள் வாழ்ந்து விடும். ஆனால் மரங்கள் இல்லாமல் மனிதர்களும், எந்த உயிரினமும் வாழ முடியாது. உலக உயிர்களின் மூச்சு மரங்களே. இதையே நாம் ஆக்சிஜன் என்று சொல்கிறோம்.

பிள்ளைகளுக்கு இயற்கையை நேசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த மாநாட்டை நடத்துகிறோம். ஆனால் இந்த அரசு மரங்களை மண்ணில் வளர்க்காமல், பதாகைகளில் மற்றும் விளம்பரங்களில் மட்டுமே வளர்க்கிறது.

1.5 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் என்கிறார்கள். ஒவ்வொரு தலைவரின் பிறந்தநாளிலும் 1.5 கோடி மரம் நாட்டியிருந்தால் இன்று எத்தனை கோடி மரங்கள் வளர்ந்திருக்கும். அதுபோலவே நடிகர்களும், ரசிகர்களிடம் ‘பிறந்த நாளில் மரம் நடுங்கள்’ என்றிருந்தால் எவ்வளவு பசுமை வளர்ந்திருக்கும்.

பருவநிலை மாறிவிட்டது என்று சொல்கிறார்கள். உண்மையில் பருவநிலையே மாறிவிட்டதா, அல்லது நீங்கள்தான் அதை மாற்றினீர்களா? வணங்குவதற்கு லட்சம் சாமிகள் இருக்கலாம். ஆனால் வாழ்வதற்கு ஒரே ஒரு பூமிதான் உள்ளது. வெயில் அடித்தால் குடை பிடிக்கிறோம். புவி வெப்பமடைதலைத் தடுக்க வேண்டுமானால் பச்சைக் குடை பிடிக்க வேண்டும். அதுதான் மரக் குடை.

வளர்ப்பதில் என்ன கஷ்டம்? நான் பத்தாண்டு பசுமைத் திட்டத்தையும், பல கோடி பனைத் திட்டத்தையும் அறிவித்து விடுகிறேன். ஐந்து ஆண்டுகள் ஆட்சியைத் தாருங்கள்; இந்த பூமியை பச்சை போர்வையால் போர்த்தி விடுவேன்,” என்றார் சீமான்.

Tags: ntkntk seemansave treesseemantrees manadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 20 August 2025 | Retro tamil

Next Post

திருநங்கைகளை அவதூறாக பேசிய பாஜக மாநில செயலாளர்

Related Posts

ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
News

ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

January 25, 2026
தாம்பரம் பைபாஸ் சாலையில் தனியார் பேருந்து விபத்து – முன்பக்க டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு
News

தாம்பரம் பைபாஸ் சாலையில் தனியார் பேருந்து விபத்து – முன்பக்க டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு

January 25, 2026
ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி
News

ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

January 25, 2026
மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை
News

மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

January 25, 2026
Next Post
திருநங்கைகளை அவதூறாக பேசிய பாஜக மாநில செயலாளர்

திருநங்கைகளை அவதூறாக பேசிய பாஜக மாநில செயலாளர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

January 24, 2026
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் மாநில தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட கைது

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் மாநில தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட கைது

January 19, 2026
மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

December 8, 2025

நாகையில் திமுகவிற்கு தாவிய தவெக ஒன்றிய செயலாளர் – செலவு செய்ய சொல்லி தொல்லை செய்வதாகவும் வருத்தம்.

May 31, 2025
ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

0
தாம்பரம் பைபாஸ் சாலையில் தனியார் பேருந்து விபத்து – முன்பக்க டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு

தாம்பரம் பைபாஸ் சாலையில் தனியார் பேருந்து விபத்து – முன்பக்க டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு

0
ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

0
மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

0
ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

January 25, 2026
தாம்பரம் பைபாஸ் சாலையில் தனியார் பேருந்து விபத்து – முன்பக்க டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு

தாம்பரம் பைபாஸ் சாலையில் தனியார் பேருந்து விபத்து – முன்பக்க டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு

January 25, 2026
ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

January 25, 2026
மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

January 25, 2026

Recent News

ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

January 25, 2026
தாம்பரம் பைபாஸ் சாலையில் தனியார் பேருந்து விபத்து – முன்பக்க டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு

தாம்பரம் பைபாஸ் சாலையில் தனியார் பேருந்து விபத்து – முன்பக்க டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு

January 25, 2026
ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

January 25, 2026
மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

January 25, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.