சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவில், ஆனி மாத மாதாந்திர பூஜைகளை முன்னிட்டு நாளை (ஜூலை 16) திறக்கப்படுகிறது. இந்த நடை ஜூலை 21-ந்தேதி வரை திறந்திருக்கும்.

அதேவேளை, புதிதாக கட்டப்பட்ட நவக்கிரக கோவிலின் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் கடந்த ஜூலை 13-ந்தேதி நடைபெற்றது. இதற்காக கோவில் நடை ஜூலை 11-ந்தேதி திறக்கப்பட்டு, ஜூலை 13-ந்தேதி இரவு மீண்டும் மூடப்பட்டது.

நாளை மறுநாள் (ஜூலை 17) முதல் கோவிலில் கணபதி ஹோமம், உஷபூஜை உள்ளிட்ட வழக்கமான தினசரி பூஜைகள் தொடங்கும். அதுடன், உதயாஸ்தமய பூஜை, நெய் அபிஷேகம் மற்றும் படி பூஜை போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

மாதாந்திர பூஜைகள் முடிந்ததும், ஜூலை 21-ந்தேதி இரவு 10 மணிக்கு கோவில் நடை மீண்டும் மூடப்படும்.

Exit mobile version