December 13, 2025, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

2027-ல் குலசேகரன்பட்டினத்திலிருந்து ராக்கெட் ஏவப்படும்!

by sowmiarajan
December 12, 2025
in News
A A
0
2027-ல் குலசேகரன்பட்டினத்திலிருந்து ராக்கெட் ஏவப்படும்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்கள் குறித்து இஸ்ரோ (ISRO) தலைவர் நாராயணன் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, வரும் 2035ஆம் ஆண்டுக்குள் ‘பாரதிய அந்தரிக்‌ஷா நிலையம்’ (பிஏஎஸ்) என்ற பெயரில் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம் விண்வெளியில் அமைக்கப்படும் என்றும், குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வரும் நாட்டின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முதல் ராக்கெட் ஏவப்படும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார். அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் மட்டுமே விண்வெளியில் சொந்த நிலையங்களைக் கொண்டுள்ள நிலையில், அந்தப் போட்டியில் தற்போது இந்தியாவும் இணைய உள்ளது.

தற்போது சர்வதேச விண்வெளி நிலையம் (ஐ.எஸ்.எஸ்.) அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி ஆகியவற்றின் கூட்டுத் திட்டத்திலும், சீனாவின் தியாங்கோங் விண்வெளி நிலையம் தனியாகவும் செயல்பட்டு வருகின்றன. சர்வதேச நிலையத்திற்கு முன்னோடியாகச் செயல்பட்ட ரஷ்யாவின் ‘மிர்’ நிலையம் தற்போது செயல்பாட்டில் இல்லை. ரஷ்யா தற்போது ‘ரஷ்யன் ஆர்பிட்டல் சர்வீஸ்’ என்ற புதிய நிலையத்தை உருவாக்கும் திட்டத்தில் உள்ளது.இந்தச் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அறிவிப்புப்படி, 2035ஆம் ஆண்டுக்குள் இந்தியா பிரத்யேகமாக ‘பாரதிய அந்தரிக்‌ஷா நிலையம்’ என்ற பெயரில் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை விண்வெளியில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

 

இஸ்ரோ தலைவர் நாராயணன் பாளையங்கோட்டையில் உள்ள கடற்படை செயற்கைக்கோள் தகவல் தொடர்பகத்திற்கு நேற்று (டிசம்பர் 11) வருகை தந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்: இந்திய விண்வெளி நிலையமானது 2035க்குள் விண்வெளியில் அமைக்கப்படும். இது மொத்தம் 5 மாட்யூல்களைக் (Modules) கொண்டிருக்கும். இதில், முதல் மாட்யூல் 2028ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்படும்.

ககன்யான் திட்டம் என்பது இந்தியாவின் சொந்த ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பி, அவர்களைப் பாதுகாப்பாகத் திரும்பக் கொண்டு வரும் திட்டமாகும். ராக்கெட் தயாரிப்புப் பணிகள் மற்றும் வீரர்களுக்கான வெப்பம், அழுத்தம், ஆக்சிஜன் ஆகியவற்றைச் சமநிலையில் வைக்கும் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு அமைப்புகள் தயார் நிலையில் உள்ளன. ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டால் வீரர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கான ‘குரூ எஸ்கேப் சிஸ்டம்’ வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 8,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மனிதர்களை அனுப்புவதற்கு முன்பாக, ஆளில்லாத 3 ராக்கெட்டுகளைச் சோதனை ஓட்டமாக அனுப்ப உள்ளோம். இதைத் தொடர்ந்து, 2027ஆம் ஆண்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வரும் நாட்டின் இரண்டாவது ஏவுதளப் பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அங்கிருந்து ராக்கெட் ஏவப்படும். இது ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்தபடியாக, இந்தியாவின் மிக முக்கியமான இரண்டாவது ஏவுதளமாக அமையும். நிலவில் இறங்கி, அங்கிருந்து மண் மாதிரிகளை பூமிக்குக் கொண்டுவரும் இலக்கு கொண்ட சந்திரயான்-4 திட்டத்திற்கான பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த அறிவிப்புகள் மூலம், விண்வெளி ஆய்வில் இந்தியா புதிய உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது.

Tags: 2027 missionisroKulasekarapattinamrocket launchspace program
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

‘சமூக வலைதளங்களில் பார்ப்பவை அனைத்தையும் நம்ப வேண்டாம்!’ அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை

Next Post

கொடைக்கானல் மலைச்சாலையில் அரசுப் பஸ்சை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானை

Related Posts

1000 ரூபாய் வழங்கும் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் – ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
News

1000 ரூபாய் வழங்கும் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் – ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

December 12, 2025
மார்கழியை முன்னிட்டு சாத்தூரில் வண்ணக் கோலப்பொடி தயாரிப்பு
News

மார்கழியை முன்னிட்டு சாத்தூரில் வண்ணக் கோலப்பொடி தயாரிப்பு

December 12, 2025
கோவை கீரணத்தம் குளத்தில் 3 காட்டு யானைகள் உற்சாக குளியல்
News

கோவை கீரணத்தம் குளத்தில் 3 காட்டு யானைகள் உற்சாக குளியல்

December 12, 2025
கொடைக்கானல் மலைச்சாலையில் அரசுப் பஸ்சை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானை
News

கொடைக்கானல் மலைச்சாலையில் அரசுப் பஸ்சை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானை

December 12, 2025
Next Post
கொடைக்கானல் மலைச்சாலையில் அரசுப் பஸ்சை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானை

கொடைக்கானல் மலைச்சாலையில் அரசுப் பஸ்சை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
1000 ரூபாய் வழங்கும் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் – ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

1000 ரூபாய் வழங்கும் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் – ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

December 12, 2025
த வெ க கூட்ட நெரிசல் வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

த வெ க கூட்ட நெரிசல் வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

December 12, 2025
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம் – ராமதாஸ் பங்கேற்பு

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம் – ராமதாஸ் பங்கேற்பு

December 12, 2025
சுவாமி மலை

சுவாமி மலை

October 18, 2025
1000 ரூபாய் வழங்கும் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் – ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

1000 ரூபாய் வழங்கும் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் – ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

0
மார்கழியை முன்னிட்டு சாத்தூரில் வண்ணக் கோலப்பொடி தயாரிப்பு

மார்கழியை முன்னிட்டு சாத்தூரில் வண்ணக் கோலப்பொடி தயாரிப்பு

0
கோவை கீரணத்தம் குளத்தில் 3 காட்டு யானைகள் உற்சாக குளியல்

கோவை கீரணத்தம் குளத்தில் 3 காட்டு யானைகள் உற்சாக குளியல்

0
கொடைக்கானல் மலைச்சாலையில் அரசுப் பஸ்சை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானை

கொடைக்கானல் மலைச்சாலையில் அரசுப் பஸ்சை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானை

0
1000 ரூபாய் வழங்கும் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் – ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

1000 ரூபாய் வழங்கும் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் – ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

December 12, 2025
மார்கழியை முன்னிட்டு சாத்தூரில் வண்ணக் கோலப்பொடி தயாரிப்பு

மார்கழியை முன்னிட்டு சாத்தூரில் வண்ணக் கோலப்பொடி தயாரிப்பு

December 12, 2025
கோவை கீரணத்தம் குளத்தில் 3 காட்டு யானைகள் உற்சாக குளியல்

கோவை கீரணத்தம் குளத்தில் 3 காட்டு யானைகள் உற்சாக குளியல்

December 12, 2025
கொடைக்கானல் மலைச்சாலையில் அரசுப் பஸ்சை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானை

கொடைக்கானல் மலைச்சாலையில் அரசுப் பஸ்சை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானை

December 12, 2025

Recent News

1000 ரூபாய் வழங்கும் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் – ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

1000 ரூபாய் வழங்கும் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் – ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

December 12, 2025
மார்கழியை முன்னிட்டு சாத்தூரில் வண்ணக் கோலப்பொடி தயாரிப்பு

மார்கழியை முன்னிட்டு சாத்தூரில் வண்ணக் கோலப்பொடி தயாரிப்பு

December 12, 2025
கோவை கீரணத்தம் குளத்தில் 3 காட்டு யானைகள் உற்சாக குளியல்

கோவை கீரணத்தம் குளத்தில் 3 காட்டு யானைகள் உற்சாக குளியல்

December 12, 2025
கொடைக்கானல் மலைச்சாலையில் அரசுப் பஸ்சை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானை

கொடைக்கானல் மலைச்சாலையில் அரசுப் பஸ்சை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானை

December 12, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.