March 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“சமரசம் செய்யத் தயார் உயர்நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பு அதிரடி!

by sowmiarajan
December 18, 2025
in News
A A
0
“சமரசம் செய்யத் தயார் உயர்நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பு அதிரடி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சர்ச்சைக்குரிய தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டன. “கோவில் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டிய அறநிலையத்துறை தன் கடமையிலிருந்து தவறிவிட்டது” என்று மனுதாரர் தரப்பு குற்றம் சாட்டியுள்ளதோடு, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் மூலம் சமரச தீர்வு காணத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

 திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள ஒரு கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி ராம ரவிகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கில், தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீபம் ஏற்ற உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவை நிறைவேற்றாததால் அரசு அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. இதனை எதிர்த்துத் தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தர்கா நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன் கடந்த நான்கு நாட்களாக விசாரணைக்கு வந்தது.

இன்று நடைபெற்ற விசாரணையில் மனுதாரர் ராம ரவிகுமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.ஸ்ரீராம் மற்றும் வள்ளியப்பன் ஆகியோர் பல்வேறு வாதங்களை முன்வைத்தனர். “கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்களைப் பாதுகாப்பது அறநிலையத்துறையின் அடிப்படை கடமை. ஆனால், இந்த விவகாரத்தில் அவர்கள் முற்றிலும் தவறிவிட்டனர். 1920-ம் ஆண்டின் சிவில் வழக்கு உத்தரவுப்படி, அந்த இடத்தில் தீபத்தூண் அமைந்துள்ளதற்கும், அங்குத் தீபம் ஏற்றியதற்கும் ஆவணங்கள் உள்ளன. ஆனால் அரசுத் தரப்பு, அது சமணர்கள் காலத் தூண் என்றும், நில அளவைக் கல் என்றும் மாற்றி மாற்றிப் பேசி நிலைமையைச் சிக்கலாக்குகிறது” என்று வாதிட்டனர்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வள்ளியப்பன் பேசுகையில், “அந்தத் தூணில் தீபம் ஏற்றினால் மட்டுமே சுற்றியுள்ள மக்களுக்கு அது தெளிவாகத் தெரியும். இந்த விவகாரத்தை அரசு வேண்டுமென்றே சிக்கலாக்கி வருகிறது. இருப்பினும், இந்த நீதிமன்றம் நேரடியாகத் தலையிட்டு ஒரு சுமுகமான சமரச தீர்வை முன்வைத்தால், அதனை ஏற்க மனுதாரர் ராம ரவிகுமார் தரப்பு தயாராக உள்ளது. மேலும், கோவில் மற்றும் தர்காவிற்குச் சொந்தமான நில எல்லைகளைத் துல்லியமாக நிர்ணயிக்க மலையை அளவீடு செய்ய ஒரு கமிஷனரை நியமிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

அரசு தரப்பில், “மலை உச்சியில் கடந்த 73 ஆண்டுகளாக உச்சி பிள்ளையார் கோவிலில்தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. மனுதாரர் குறிப்பிடும் தூண் ஒரு சர்வே கல் மட்டுமே; அதில் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை” எனத் தொடர்ந்து வாதிடப்பட்டு வருகிறது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நாளைக்கு (டிசம்பர் 19) ஒத்திவைத்தனர். உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் தெரிவித்த கருத்தால் ஏற்கனவே பரபரப்பில் உள்ள இந்த வழக்கு, தற்போது சமரசப் பேச்சுவார்த்தை மற்றும் எல்லை அளவீடு என்ற புதிய திசையை நோக்கி நகர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: court developmentHigh Court casejudicial newslegal proceedingspetitioner compromise
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஹஜ் இல்ல அடிக்கல் நாட்டு விழா: தலைமை ஹாஜிக்கு அனுமதி மறுப்பா?

Next Post

“நீதிமன்ற உத்தரவை மீறுவது மன்னிக்க முடியாதது” – திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசுக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடும் எச்சரிக்கை!

Related Posts

சிவகாசி கண்மாயில் வினோத “நட்சத்திர ஆமை” மீட்பு: இளைஞர்களின் துரித செயலால் வனத்துறையிடம் ஒப்படைப்பு – கண்மாயில் அதிரடி ஆய்வு நடத்தத் திட்டம்!
News

சிவகாசி கண்மாயில் வினோத “நட்சத்திர ஆமை” மீட்பு: இளைஞர்களின் துரித செயலால் வனத்துறையிடம் ஒப்படைப்பு – கண்மாயில் அதிரடி ஆய்வு நடத்தத் திட்டம்!

March 4, 2026
வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!
News

வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

March 4, 2026
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!
News

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

March 4, 2026
ஆலங்குடி அருகே மாரியம்மன் கோவில் மாசி திருவிழா ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த 720 காளைகள் – மல்லுக்கட்டிய 320 காளையர்கள்!
News

ஆலங்குடி அருகே மாரியம்மன் கோவில் மாசி திருவிழா ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த 720 காளைகள் – மல்லுக்கட்டிய 320 காளையர்கள்!

March 4, 2026
Next Post
“நீதிமன்ற உத்தரவை மீறுவது மன்னிக்க முடியாதது” – திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசுக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடும் எச்சரிக்கை!

"நீதிமன்ற உத்தரவை மீறுவது மன்னிக்க முடியாதது" - திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசுக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடும் எச்சரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

March 3, 2026
திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

March 3, 2026
விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

March 3, 2026
சிவகாசி கண்மாயில் வினோத “நட்சத்திர ஆமை” மீட்பு: இளைஞர்களின் துரித செயலால் வனத்துறையிடம் ஒப்படைப்பு – கண்மாயில் அதிரடி ஆய்வு நடத்தத் திட்டம்!

சிவகாசி கண்மாயில் வினோத “நட்சத்திர ஆமை” மீட்பு: இளைஞர்களின் துரித செயலால் வனத்துறையிடம் ஒப்படைப்பு – கண்மாயில் அதிரடி ஆய்வு நடத்தத் திட்டம்!

0
வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

0
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

0
ஆலங்குடி அருகே மாரியம்மன் கோவில் மாசி திருவிழா ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த 720 காளைகள் – மல்லுக்கட்டிய 320 காளையர்கள்!

ஆலங்குடி அருகே மாரியம்மன் கோவில் மாசி திருவிழா ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த 720 காளைகள் – மல்லுக்கட்டிய 320 காளையர்கள்!

0
சிவகாசி கண்மாயில் வினோத “நட்சத்திர ஆமை” மீட்பு: இளைஞர்களின் துரித செயலால் வனத்துறையிடம் ஒப்படைப்பு – கண்மாயில் அதிரடி ஆய்வு நடத்தத் திட்டம்!

சிவகாசி கண்மாயில் வினோத “நட்சத்திர ஆமை” மீட்பு: இளைஞர்களின் துரித செயலால் வனத்துறையிடம் ஒப்படைப்பு – கண்மாயில் அதிரடி ஆய்வு நடத்தத் திட்டம்!

March 4, 2026
வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

March 4, 2026
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

March 4, 2026
ஆலங்குடி அருகே மாரியம்மன் கோவில் மாசி திருவிழா ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த 720 காளைகள் – மல்லுக்கட்டிய 320 காளையர்கள்!

ஆலங்குடி அருகே மாரியம்மன் கோவில் மாசி திருவிழா ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த 720 காளைகள் – மல்லுக்கட்டிய 320 காளையர்கள்!

March 4, 2026

Recent News

சிவகாசி கண்மாயில் வினோத “நட்சத்திர ஆமை” மீட்பு: இளைஞர்களின் துரித செயலால் வனத்துறையிடம் ஒப்படைப்பு – கண்மாயில் அதிரடி ஆய்வு நடத்தத் திட்டம்!

சிவகாசி கண்மாயில் வினோத “நட்சத்திர ஆமை” மீட்பு: இளைஞர்களின் துரித செயலால் வனத்துறையிடம் ஒப்படைப்பு – கண்மாயில் அதிரடி ஆய்வு நடத்தத் திட்டம்!

March 4, 2026
வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

March 4, 2026
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

March 4, 2026
ஆலங்குடி அருகே மாரியம்மன் கோவில் மாசி திருவிழா ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த 720 காளைகள் – மல்லுக்கட்டிய 320 காளையர்கள்!

ஆலங்குடி அருகே மாரியம்மன் கோவில் மாசி திருவிழா ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த 720 காளைகள் – மல்லுக்கட்டிய 320 காளையர்கள்!

March 4, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.