மாலத்தீவிற்கு சுற்றுப்பயணம் ; டில்லியிலிருந்து பிரதமர் மோடி புறப்பட்டார்

பிரிட்டன் மற்றும் மாலத்தீவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணமாக இன்று (ஜூலை 23) பிரதமர் நரேந்திர மோடி டில்லியிலிருந்து புறப்பட்டார்.

முதலில் பிரிட்டன் சென்று, அந்நாட்டின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டாமரை பிரதமர் மோடி சந்திக்கவுள்ளார். இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து முக்கிய விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சுற்றுப்பயணத்தின் போது, இந்தியா – பிரிட்டன் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கார்கள், துணிகள், வேளாண் பொருட்கள் உள்ளிட்ட 99 சதவீதமான பொருட்களுக்கு வரி விலக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

பிரிட்டன் பயணத்தை முடித்தவுடன், ஜூலை 25 மற்றும் 26 தேதிகளில் பிரதமர் மோடி மாலத்தீவுக்கு செல்லவுள்ளார். அங்கு நடைபெறவுள்ள 60வது தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இதையடுத்து, மாலத்தீவின் அதிபர் முஹமது முய்சுவை சந்தித்து இருநாட்டு உறவுகளைப்பற்றிய கலந்துரையாடல் நடத்த உள்ளார்.

அதிபராக பதவியேற்ற பின், மோடியின் இந்த மாலத்தீவு பயணம் முதலாவதாகும். எனவே, இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மேலும் வலுப்பெறும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

Exit mobile version