பாலியல் வழக்கு ; பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும் வரை சிறை தண்டனை

பெங்களூரு : பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு, சிறப்பு நீதிமன்றம் சாகும் வரை சிறைத் தண்டனையை விதித்து அதிரடியான தீர்ப்பை இன்று வழங்கியது.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஜனதாதள கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (34) மீது, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பல பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவரது வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதைக் தொடர்ந்து, மைசூருவைச் சேர்ந்த 47 வயது ஒரு பெண், ஹொளேநரசிபுரா ரூரல் போலீசில் புகார் அளித்தார். புகாரியின்படி, அவர் பிரஜ்வலின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை பார்த்தவராவார்.

இதைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணை எஸ்ஐடி சிறப்பு குழுவுக்கு மாற்றப்பட்டது. மே 31ம் தேதி பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் அவரை கைது செய்தனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் 123 ஆதாரங்கள் மற்றும் 26 சாட்சிகளிடம் விவரம் சேகரித்தனர். பின்னர், 1,652 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

வழக்கு விசாரணையின் முடிவில், நீதிபதி சந்தோஷ் கஜானன், பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி எனத் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, அவருக்கு உயிர்நாளளவான சிறைத் தண்டனை மற்றும் ₹10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் பிரஜ்வல் கண்ணீர் விட்டு அழைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version