வரவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி புதிய அரசியல் தளமாக உருவெடுத்துள்ள நமது மக்கள் முன்னேற்றக் கழகம் (நமமுக) தனது வலிமையை சேலத்தில் வெளிப்படுத்தியது. சேலம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் இணைவு விழாவில், சுமார் 3,000க்கும் மேற்பட்டோர் நமமுகவில் இணைந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளர் எம்.எஸ். மணி தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் கணேசன், துணைப் பொதுச் செயலாளர்கள் கூடல் செல்வேந்திரன், தமிழ்ச்செல்வன்,மாநில ஊடகப் பிரிவு செயலாளர் அபுதாகீர்,
மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நமமுகக் கட்சியின் நிறுவனர் தலைவர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியபோது, அவர் கூறியதாவது: “தமிழ்நாட்டில் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை அரசியல் வழியே கொண்டு வருவது நமது பணி. சுத்தமான தண்ணீர், தூய்மையான காற்று, வளமான மண்வளம் — இதுவே நமது கட்சியின் மூலக் கொள்கை. இந்நிலத்தில் ஒவ்வொரு குடிமகனும் அரசியல் அதிகாரம் பெறும் நிலை ஏற்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.” அவர் மேலும் வலியுறுத்தினார்.
“2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக நமது மக்கள் முன்னேற்றக் கழகம் உருவெடுக்கும். பழைய கட்சிகளால் விரக்தியடைந்த மக்கள் இன்று நமமுகத்தை நம்பிக்கையின் சின்னமாகக் காண்கிறார்கள்.” 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுவதாவது: “மண்டல அளவில் வலுவாக வேரூன்றிய சிறு, நடுத்தரக் கட்சிகள் மாநில அரசியலின் தீர்மானிக்கும் சக்திகளாக உருவாகும் வாய்ப்பு அதிகம். நமமுக அதில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.” நமமுக தலைவர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா, கடந்த சில மாதங்களாக மாவட்ட அளவிலான “மக்களுடன் நேரடி சந்திப்பு – முன்னேற்ற யாத்திரை” என்ற திட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.
இதன் மூலம், தண்ணீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இளைஞர் தொழில் ஊக்குவிப்பு ஆகிய துறைகளில் கட்சியின் கொள்கை நிலைப்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்.
இளைஞர் தலைமையிலான அரசியல் இயக்கம் என்ற அடையாளத்தைப் பெற்ற நமமுகம், இம்முறை இணைவு விழாவில் பெரும்பாலானோர் இளைஞர்கள், சமூகப் பணியாளர்கள், விவசாயிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்கள் கூறியதாவது: “அழுக்கு அரசியலை விட்டு விலகி, நிலம் மற்றும் இயற்கை அடிப்படையில் நம்பகமான அரசியல் தேவை. அதற்கான தளம் நமமுகம் தான் என நாங்கள் நம்புகிறோம்.” இணைவு விழாவில் – சேலம் மண்டல அமைப்பாளர் நேதாஜி, சேலம் மாநகர அமைப்பாளர் வி.கே.ஆர். கணேசன், புறநகர் மாவட்ட அமைப்பாளர் பெருமாள், மாநில வக்கீல் அணி துணை அமைப்பாளர் கோவிந்தராஜ், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் வெங்கடேசன், மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், ஊரக பகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர். விழா நிறைவில் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா கூறியதாவது: “அரசியல் என்பது ஆட்சியைப் பெறுவதற்கான வழிமுறை அல்ல;
மக்களின் வாழ்வை மேம்படுத்தும் பொறுப்பு. அரசியலை சுத்தமாகவும் சமூகநீதியுடன் கூடியதாகவும் மாற்றுவதே நமமுகத்தின் இலக்கு.” என கூறினார்.

















